Monday 29 June 2015

குரு பெயர்ச்சி பலன்கள்-2015

குரு பெயர்ச்சி பலன்கள்
                மன்மத ஆண்டு ஆனிமாதம் 20ம் தேதி 5/06.07.2015 ஞாயிற்றுக்கிழமை இரவு 1.03 மணிக்கு மகம் நட்சத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசிக்கு குரு பெயர்ச்சி அடைகிறார்.
                மார்கழி மாதம் 04ம் தேதி 20/21.12.2015 அதி காலை ஞாயிற்றுக்கிழமை இரவு 2.45 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் அதிசாரம் பலம் பெற்று கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
                தை மாதம் 24ம் தேதி 7/08.02.2016 அதிகாலை ஞாயிற்றுக்கிழமை இரவு 12.26 மணிக்கு உத்திர நட்சத்திரம் 1ம் பாதம் சிம்ம ராசிக்கு வக்ரம் அடைந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். இதனால் ஏற்படும் பலன்களை ஒவ்வொரு ராசிக்கும் என்ன வென்று பார்ப்போம்.
மேஷ ராசி
(அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
                குரு பகவான் இதுவரை 4-மிடத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளைத் தந்திருப்பார். குடும்பத்தில் அமைதியின்மை, உறவினர்களுடன் மனக்கசப்பு, கணவன், மனைவிடையே கருத்து வேறுபாடு இவைகளை தந்திருப்பார். வாகனங்கள் பராமரிப்பு வீட்டுப் பராமரிப்பு போன்ற செலவுகளையும் செய்திருப்பார்.
                தற்போது 5-மிடத்திற்கு அதாவது சிம்மராசிக்கு செல்கிறார். இந்த இடம் சிறப்பான இடமாகும். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மகிழ்ச்சி பெருகும் தடைபட்ட திருமணங்கள் வெற்றிகரமாக நடக்கும் வீடு, மனை, வாகன யோகங்களைத் தருவார். மேஷராசியை ஒன்பதாம் பார்வையால் பார்ப்பதால் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கச் செய்வார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். தடைகள் நீங்கி முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும். சமூகத்தில் அந்தஸ்து, மதிப்பு, மரியாதை கூடும்.
                கடந்த ஆண்டு இருந்ததைவிட இந்த ஆண்டு நன்றாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். ஒரு சிலர் ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவார்கள். குருவின் 5,7,9ன் பார்வைகளால் நன்மை உண்டு. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். அதனால் நன்மை உண்டு. பிறருக்கு உதவி புரிந்து மகிழ்ச்சி அடைவீர்கள் படித்து வேலைக்காக காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும் அரசிடமிருந்து எதிர் பார்த்த உதவி கிடைக்கும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும் விரும்பிய இடத்திற்கு பணிமாற்றம் கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல நேரிடும் சொத்து சேர்க்கை உண்டாகும். விவசாயிகள் நல்ல பலன் அடைவார்கள் 2015 டிசம்பர் மாதத்திற்கு பிறகு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் மருத்துவ செலவு ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படவும் மொத்தத்தில் இந்த இரு பெயர்ச்சி யோகத்தைதரும் காலமாகும்.
ரிஷப ராசி
(கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1,2 பாதங்கள்)
                இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மிடத்தில் இருந்து வந்தார். இது சிறப்பான இடமல்ல உங்கள் முயற்சியில் தடைகள் ஏற்பட்டு இருக்கும். தற்போது 3 மிடத்திலிருந்து 4 மிடத்திருக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது குருபகவான் 4 மிடத்தில் இருக்கும் போது உறவினர் வகையில் வீண் பகையையும், குடும்பத்தில் பிரச்சனைகளையும் உருவாக்குபவர் சோதனைகளைக் கொடுத்தாலும் உங்களது விடா முயற்சியால் எதையும் சமாளிக்கும் திறமையும் உண்டாகும். கஷ்டப்பட்டு உழைத்தால் அதற்குரிய பலன் உண்டு. பணப் புழக்கம் இருந்தாலும் செலவும் அதிகரிக்கும்.
                2015 டிசம்பர் மாதத்திற்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி சந்தோஷம் கிடைக்கும் போட்டிகளில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி சமரசம் ஏற்படும். எதிலும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டாம்.
மிதுன ராசி
(மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1,2,3 பாதங்கள்)
                குரு பகவான் கடந்த ஆண்டில் இதுவரை 2ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். துணிச்சலுடன் ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றி கொண்டு இருப்பீர்கள். தற்போது 2 மிடத்திலிருந்த குருபகவான் 3 மிடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. தீதிலொரு மூன்றிலே துரியோதனை படை மாண்டது,” என்பது ஜோதிட வாக்கு அதாவது துரியோதனன் ஜாதகத்தில் 3 மிடத்தில் இருக்கும் போது அவனது படை தோல்வி கண்டது. அதற்காக பயப்பட வேண்டாம் காரியத்தடைகள் உண்டாகும். குரு வின் 5,7,9 பார்வைகளினால் நன்மை உண்டாகும். குரு இருக்குமிடத்தை விட பார்க்கும் இடங்கள் பலம்பெறும், நன்மை அடையும் குரு பார்த்தால் கோடி நன்மை.
                பொருளாதரம் மேன்மை அடையும் வீண்வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். டிசம்பருக்கு பிறகு சிறு தடைகள் ஏற்படலாம். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். ஒரு சிலர் கடின உழைப்பால் வீடு, வாகனம் வாங்குவர் தந்தையின் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்ல நேரிடும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு.
கடக ராசி
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
                இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் இருந்து குருபகவான் 2ம் வீட்டிற்கு செல்கிறார். இது மிகவும் உன்னத நிலை. எண்ணற்ற நன்மைகள் வாழ்க்கையில் படிப்படியாக கிடைக்கும். உங்களது திறமை வெளிப்படும். மனதில் துணிச்சல் ஏற்பட்டு பல நல்ல காரியங்களைச் செய்வீர்கள். உங்களுக்கு தேவையான பொருட்களை நீங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வீட்டு, மனை, வாகனம் யோகங்கள் உண்டாகும். எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கி சாதகமான சூழ்நிலை உண்டாகும். மதிப்பு மரியாதை, அந்தஸ்து சமூகத்தில் ஏற்படும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்யம் கிட்டும். ஒரு சிலர் புது வீடு வாங்கி கிரகப் பிரவேசம் செய்யும் சுப நிகழ்ச்சிகளைச் செய்வர். உறவினர் பாசத்துடன் இருப்பர் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிநாடு யோகம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் காலமிது அரசிடம் இருந்து எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும் வேலை தேடுவோருக்கு வேலை கிடைக்கும். வாழ்வில் எதிர்பாராத சந்தோஷங்கள் நிகழும். கணவன், மனைவியிடையே பாச உணர்வு அதிகரிக்கும் விருந்துகள், சுப நிகழ்ச்சிகள் என்ற அடிக்கடி விழாக்களுக்கு சென்று வருவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சியால் தாங்கள் முன்னேற்றமான பலன்களை அடைவீர்கள்.
சிம்மராசி
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
                குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் இருந்து பல்வேறு இடையூறுகளையும், பொருளாதார நஷ்டத்தையும் கொடுத்துக் கொண்டு இருந்தார். தற்போது உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைக்கிறார். இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஜென்மராமர் வனத்திலே சீதையை சிறைவைத்ததும்என்று ஜோதிட வாக்கு. அதாவது ராமர் ஜாதகத்தில் ஜென்மத்தில் குரு இருக்கும்போது வனவாசம் சென்றால் என்று கூறப்படுகிறது. பொதுவாக குரு ஜென்மத்தில் இருக்கும் போது கலகம், விரோதம், வீண்வழக்குள் என்று மந்த நிலை ஏற்படும் அதற்காக கவலைப்பட வேண்டாம். குருவின் 5,7,9 பார்வைகளினால் நன்மைகளும் உண்டாகும் குரு பார்த்தால் கோடி நன்மை குரு இருக்குமிடத்தைவிட பார்க்கும் இடங்களுக்கு நன்மை உண்டு. இதன் மூலமாக தங்களுக்கு ஏற்படும் இடையூறுகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும் குடும்பத்தில் மகிழ்ச்சிபொங்கும் மதிப்பு, மரியாதை கூடும். கணவன் மனைவிடையே மனக் கசப்புகள் உண்டாகும், சுப காரியங்களுக்காக கடன வாங்க நேரிடும். ஊர் விட்டு ஊர் செல்லுதல் போன்றவை ஒரு சிலருக்கு ஏற்படும் பணிமாற்றங்கள் ஏற்படும் பொருள் விரயம் ஏற்படலாம் சிக்கனத்தை கடைப் பிடிப்பது நல்லது. கடினமாக உழைக்க வேண்டியகால மிது.
                டிசம்பர் மாதத்திற்கு பிறகு முன்னேற்றம் காணப்படும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் நல்ல பொருளாதார முன்னேற்றம் அடைவீர்கள் அரசிடம் இருந்து நல்ல உதவிகளைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள் புதிய, முயற்சிகள் கை கொடுக்கும் வழக்கு விவகாரங்கள் இழுத்தடித்தாலும் பாதகம் ஏற்பட வாய்ப்பில்லை. வியாழன் தோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வரவும்.
கன்னி ராசி
(உத்திரம் 2,3,4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள்)
                இது வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து இருப்பார். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்து இருக்கும். பணப் புழக்கம் அதிகமாக இருந்திருக்கும் இப்படி பல வித நன்மைகளை செய்த குருபகவான் தற்போது ஹயஸ்தான மான 12 மித்திற்கு வருகிறார். குரு 12ம் இடத்திற்கு வரும் போது பணப் பற்றாக் குறை ஏற்படும் வீண் விரயங்கள் உண்டாகும். பல்வேறு தொல்லைகள் ஏற்படும் மனப் குழப்பம் அடையும். இதனால் தாங்கள் வேதனைப்பட வேண்டாம்.
                டிசம்பர் மாதத்திற்கு பிறகு குருபகவான் உங்கள் ராசிக்கு அதிசாரம் பெற்று ஜென்மத்திற்கு வருகிறார். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும் சிறு சிறு பூசல்கள் உண்டாகும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்துபோனால் பிரச்சனை இல்லை. வீண் வம்பு வழக்குகள் உண்டாகும். வீட்டில் கனவு போக வாய்ப்பு உண்டு. எல்லா வகையிலும் கவனமாக இருக்கவும். இதனால் நீங்கள் மனம் வேதனைப்பட வேண்டாம். குரு பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் முடிவில் நன்மையே வந்து சேரும் வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற அஸ்திரம் சாத்தி மஞ்சள் நிற மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.
துலாம் ராசி
(சித்திரை 3,4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 பாதங்கள்)
                இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10 மிடத்தில் இருந்து பல வகைகளில் பிற்போக்கான பலன்களை செய்து வந்தார். தொழில் முன்னேற்றம் இல்லாமலும், எதைச் செய்தாலும் இழு பறி நிலையையே கொடுத்துக் கொண்டிருந்த குருபகவான் தற்போது லாபஸ்தானமான 11 மிடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். அவர் பல வகைகளில் உங்களுக்கு நன்மைகளைச் செய்யப் போகிறார். தொழில் உத்தியோகம் மேன்மை அடையும் பதவி உயர்வு ஒரு சிலருக்கு கிடைக்கும். வெளிநாடு செல்ல நேரிடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த மனக்கசப்பு நீங்கி அன்பு உண்டாகும். தடைபட்டு வந்த திருமணங்கள் நல்ல முறையில் நடைபெறும் குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர்களிடையே இருந்து வந்த மனக் கசப்பு நீங்கி ஒன்று சேரும் காலமிது.
                2015 டிசம்பர் மாதத்திற்கு பிறகு வீண் விரயம் ஏற்படலாம் வீண் வம்பு வழக்குகள் வரலாம். மருத்துவ செலவுகள் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டவும். சனிக்கிழமை தோறும் பெருமாள், ஆஞ்ச நேயரை தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். பத்திரகாளியம்மன் கோவிலுக்குச் சென்று எலுமிச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வரவும்.
விருச்சிக ராசி
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
                இதுவரை உங்கள் ராசிக்கு குருபகவான் 9ம் இடத்தில் இருந்து தங்கள் ராசியை 5ம் பார்வையால் பார்த்ததினால் பல வழிகளில் நன்மைகளைச் செய்து கொண்டிருந்தார். ஜென்மச் சனி நடை பெற்றிருந்தாலும குரு பார்வையால் நல்லவைகள் நடந்தது. எடுத்த காரியங்களில் வெற்றி, பொருளாதார மேன்மை இவைகளைச் செய்து வந்தார். தற்போது 10 மிடமான சிம்ம ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார். 10ம் இட குரு அவ்வளவு நல்லதல்ல. ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்து உண்டதும்என்று 10மிட குருவைப் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது குரு 10மிடத்தில் இருக்கும் போது சிவன் பிச்சை எடுத்தார் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக பத்தில் குருபகவான வரும்போது பொருள் விரயம், நஷ்டம், மன உளைச்சல் இவற்றை ஏற்படுத்துவார். தொழில், உத்யோகம் பாதிக்கும் நிலை உண்டாகும். இது பொதுவான பலன் ஆகும். தங்கள் ஜாதகத்தில் நல்ல திசை நல்ல புத்தி நடைபெற்றாலும், குருவின் பார்வைகளினாலும் எதையும் சமாளித்து வெற்றியும் பெறுவீர்கள். கணவன், மனையிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு ஏற்படும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழக்கற்றுக் கொள்ளுங்கள். ஒரு சிலர் கடன் வாங்கி சொத்து வாங்கும்படி நேரிடும்.
                2015 டிசம்பர் மாதத்திற்கு பிறகு நன்மையான பலன்கள் நடைபெறும் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும் குருபார்வையால் குடுமபத்தில் சிரமம் ஏற்பட்டாலும அதற்கான தீர்வு உடனடியாக கிடைக்கும். தாயின் மூலம் நன்மை பெறுவீர்கள். 6ம் வீட்டை குரு பார்ப்பதால் எதிரிகள் தங்கள் செயலைக் கண்டு அஞ்சுவார்கள். யாரையும் நம்பி பணப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வியாழக் கிழமை சிவன் கோவிலுக்குச் சென்று தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் அஸ்திரம், மஞ்சள் பூ சாத்தி கொண்டைக் கடலை மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வாருங்கள். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
தனுசு ராசி
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
                இதுவரை உங்கள் ராசிக்கு குருபகவான் 8ல் இருந்து பல இன்னல்களையும மன வேதனைகளையும் தந்து இருப்பார். ஒரு சிலர் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவச் செலவுகள் செய்திருப்பர். உறவினர் பகை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள்.
                தற்போது 8ல் இருந்து 9 மிடமான சிம்மத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த இடம் உங்கள் ராசிக்கு மிகச் சிறப்பான இடமாகும். இதுவரை உங்களுக்கு உள்ள பிரச்சனைகள் நீங்கி எல்லாக் காரியங்களும் நன்மையாகவே நடைபெறும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும் உறவினர்கள் பகை நீங்கி நட்பு பாராட்டுவார்கள். விருந்து உபசாரம் என்று அடிகடி சுப நிகழ்ச்சிகளுகு சென்று வருவீர்கள். திருமணம் நடைபெறும் குழந்தை பாக்யம் கிட்டும் புனிதயாத்திரை ஒருசிலர் சென்று வருவார்கள்.
                2015 டிசம்பர் மாதத்திற்கு பிறகு தொழில் பாதிப்பு ஏற்படும். ளுத்தியோகத்தில் உள்ளவர்கள் விரும்பாத இடங்களுக்கு மாற்றலாசி செல்ல நேரிடும் விநாயகரை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை தோறும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வரவும்.
மகர ராசி
(உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்)
                இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்து குரு பகவான் பல நன்மைகளை வழங்கிக் கொண்டிருந்தார். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை, சமூகத்தில் அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அனைத்தையும் தந்து கொண்டு இருந்தார். நினைத்த காரியங்களை நிறைவேற்றி இருப்பீர்கள் தற்போது குரு 8மிடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இது சிறப்பான இடம் அல்ல. 8ல் குரு உடல் ஆரோகியத்தை கொடுப்பார். மருத்துவச் செலவுகள் ஏற்படும் தேவையற்ற பகையை உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு இதனால் பயப்பட வேண்டாம். குரு 5,7,9 பார்வைகளினால் 12,2,4ம் இடங்களை பார்க்கிறார். இதனால் வீண் விரையங்கள் கட்டுப்படுத்தப்படும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் வீடு, மனை வாங்குவர், ஒரு சிலர் புதிதாக வீடு கட்டுவர், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும் தாயின் உடல் நன்றாக இருக்கும் தாய் மூலம் உதவி கிடைக்கும் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள் பதவி உயர்வுகிடைக்க வாய்ப்பில்லை.
                2015 டிசம்பர் மாதத்திற்கு பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு எதிர்பார்த்த காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும். வியாழன் தோறும் குருபகவானை வழிபட்டு வரவும் நன்மைகள் உண்டாகும்.
கும்பராசி
(அவிட்டம் 3,4, பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்)
                இதுவரை உங்கள் ராசிக்கு குருபகவான் 6ல் இருந்து பலவிதமான இன்னல்களை கொடுத்துக் கொண்டு இருந்தார். மனம் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டு இருந்தீர்கள். எதிரிகாளல் அச்சத்துடன் இருந்திருப்பீர்கள். வீண் விரோதம், பகை ஏற்பட்டிருக்கும் தற்போது குருபகவான் 6ம் இடத்தில் இருந்து 7-ஆம் இடமான சிம்மராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும் கணவன், மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும் கையில் எப்போதும் பணப் புழக்கம் இருக்கும். நினைத்த காரியங்களைவெற்றிகரமாக முடிப்பீர்கள். சுப நிகழ்ச்கிளுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணங்கள் உடனே நடைபெறும். புத்திர பாக்யம் கிடைக்கும் குருவின் 5,7,9 பார்வையால் உங்கள் ராசிக்கு 1,3,11 இடங்களை பார்வை இருக்கிறார். இதனால் தைரியம் உண்டாகும். தொழில் துறையில் நல்ல லாபம் அடைவீர்கள். ஆடம் வசதிகள் ஏற்படும். உத்தியோக உயர்வு, வெளிநாடு யோகம் உண்டாகும் உங்கள் திறமைகள் வெளிப்படும் சமூகத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கிடைக்கும் பிள்ளைகளால் மேன்மை அடைவீர்கள். ஆயுள், ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர, சகோதரிகளிடம் இருந்த மனக்கசப்பு நீங்கி அவர்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும். புதிய தொழில் அமைய வாய்ப்புண்டு அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நட்புறவு உண்டாகும்.
                2015 டிசம்பர் மாதத்திற்கு உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண்பகை ஏற்பட வாய்ப்புண்டு. மற்றவர்களிடம் கவனமாக பேசவும். வியாழன் தோறும் தட்சிணாமூர்த்தியை வணங்கி வரவும்.
மீனம் ராசி
(புரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
                இதுவர குருபகவான உங்கள் ராசிக்கு 5ல் இருந்து பல நன்மைகளைச் செய்து கொண்டிருந்தார். இனி 6ல் அடியெடுத்து சிம்மராசிக்கு வருகிறார். 5ல் இருந்து அனுபவித்தைப் போல் இப்போது அனுபவிக்க முடியாது. உடல் நலம் பாதிக்கும், வீண் பகை உண்டாகும். எடுத்தகாரியம் நிறைவேறாது. வீண் செலவுகள் ஏற்படும். கடின உழைப்பினால் மட்டுமே காரியத்தை நிறைவேற்ற முடியும். தேவையில்லாமல் யாருடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். கெட்ட பெயர் வாங்கும் நேரமிது அளவுடன் பேசவும் குருபார்வையினால் தொழில் முன்னேற்றம் அடையும். பொருளாதாரம் மேன்மை அடையும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு எல்லா வகையிலும் நன்மையான பலன்களே உண்டாகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிரிகள் பயந்தோடுவர் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் மூலமாக பணம் உங்களைத் தேடிவரும் மொத்தத்தில் நன்மையான பலன்களே நடக்கும்.
பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய ராசிகள்:
1.            ரிஷபம்
2.            மிதுனம்
3.            சிம்மம்
4.            கன்னி
5.            விருச்சிகம்
6.            மகரம்
7.            மீனம்     

No comments: