Sunday 12 April 2015

தமிழ் புத்தாண்டு பலன்கள் மீன ராசி (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)



மீனா ராசி நேயர்களே!

இந்த மன்மத வருடம் தங்களுக்கு யோகமான ஆண்டாகவே அமைகிறது.
தங்களது தந்தைக்கும் உங்களுக்கும் உள்ள உறவு நன்றாக அமையும்.
உத்தியோக உயர்வு,சம்பள உயர்வு ஏற்படும்.நிலம்,வீடு,மனை புதிதாக
வாங்கும் யோகம் உண்டு.வாகன  யோகமும் உண்டு.மாணவ,மாணவியர்
கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.உடல்,ஆரோக்கியம்நன்றாக இருக்கும்.பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.

புதிய தொழில்தொடங்கும் காலம் இது.அதன் மூலமாக நல்ல லாபம்
அடைவீர்கள்.விவசாயிகள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள்.
தங்களுக்கு ஏற்பட்ட கெட்ட பெயர் நீங்கி அனைவரும் தங்களை வாழ்த்த
தொடங்கி விடுவார்கள்.புதிய உறவுகள் ஏற்படும்.நண்பர்கள் வட்டாரத்தில்
நல்ல பெயர்எடுப்பீர்கள்.

திருமணம் ஆகாதவர்கள்ளுக்கு திருமணம் கைகூடும்.புத்திர பாக்கியம்
கிடைக்கும்.கணவன்,மனைவி உறவு பலப்படும்.அரசியல்வாதிகள் பதவி
உயர்வு அடைவார்கள்.கலைத்துறையினர் முன்னேற்றம் காண்பார்கள்.
உறவினர்கள் தங்களை தேடி வந்து பாராட்டுவார்கள்.பொதுவாக
இந்த மன்மத ஆண்டு உங்களுக்கு ஒரு பொற்காலம் ஆகும்.

பரிகாரம்

திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று முருகபெருமானை
தரிசனம் செய்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வரவும்.

தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்

“ஓம் விஷ்வக் சேனாய வித்மஹே
வேத்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ விஷ்வக் சேனோ ப்ரசோதயாத்”!


தமிழ் புத்தாண்டு 2015 கும்ப ராசி (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)



கும்ப ராசி நேயர்களே!

இந்த மன்மத வருடம் தங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை நிமித்தம் காரணமாக வெளி நாடு
செல்வார்கள்.முன்பு இருந்த வேலை பளு சற்று குறையும்.ஒரு இடத்தில் உற்பத்தி ஆகும் பொருளை வேறு இடத்தில் விற்று சம்பதிபவர்கள் நல்ல
லாபம் அடைவார்கள்.கணினி துறையில் சமந்தப்பட்ட வர்களுக்கு நல்ல
லாபம் கிடைக்கும்.ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.ஒரு சிலருக்கு
பணி நிரந்திரம் கிடைக்கும்.பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
வழக்கு சம்பந்தப்பட்டவைகள் தங்களுக்கு சாதகமாக அமையும்.திருமணம்
ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.

ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.மொத்தத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.வரவுக்கு ஏற்ற செலவுகளும்இருக்கும்.வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.விவசாயிகள் சுமாரான பலன்களை அடைவார்கள்.மாணவ,மாணவியர் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.விளையாட்டுதுறையில் உள்ளவர்கள்சாதனை
புரிவார்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

தாயுக்கு ஆபரேஷன் செய்யும் படி நேரிடும்.சர்கரை,ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவரை பார்க்க நேரிடும்.தெய்வ தரிசனம் காண ஒரு சிலர் புனித யாத்திரை செல்வார்கள்.கலைதுறையை சேர்த்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.அரசியலில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.பொதுவாக இந்த ராசிகாரர்களுக்கு இனி எல்லாமே நன்மையாக நடைபெறும்.

பரிகாரம்

சுருட்டபள்ளி சிவபெருமானை தீபம் ஏற்றி வழிபட்டு அர்ச்சனை செய்து
வரவும்.தினசரி சொல்ல வேண்டிய மந்திரம.

“ஓம் அச்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுய ப்ரசோதயாத்!”

Saturday 11 April 2015

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2015 மகர ராசி (உத்திராடம் 1, 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2 -ம் பாதங்கள்)



மகர ராசி நேயர்களே!

இந்த மன்மத ஆண்டு தங்களுக்கு மிகவும் உன்னத ஆண்டாகவே அமைகிறது. இந்த வருடத்தில் தாங்கள் நினைத்து வந்த அத்துணை காரியங்களும் இனிதே நடைபெறும்.தங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகி
விட்டது என்றே சொல்லாம். திருமணவயதில் உள்ளவர்களுக்கு திருமணம்
கைகூடும்.புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். தொழில் இல்லாதவர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவார்கள்.தொழில் நல்ல முறையில் நடைபெற்று நல்ல லாபம்
அடைவீர்கள்.உங்களால் பலர்நன்மை அடைவார்கள்.விரோதிகளாக
இருந்தவர்கள் கூட தற்போது உங்களிடம் நல்ல நட்புடன் இருப்பார்கள்.
கணவன்,மனைவிக்கும் ஒற்றுமை அதிகரிக்கும்.குடும்பத்தில் பிரிந்தவர்கள்
ஒன்று சேர்வார்கள்.வேலை நிமித்தம் காரணமாக ஒரு சிலர் வெளி நாடு
செல்வர்.

கல்வி பயிலும் மாணவ,மாணவியர் கவனமுடன் படித்து வந்தால் கல்வியில் மேன்மை அடைவார்கள்.வேலை தேடுவோருக்கு வேலை
கிடைக்கும்.ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.பொருளாதரத்தில்
முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு
அதிக லாபம் கிடைக்கும்.ஒரு சிலர் வீடு,வாகனம் வாங்கும் காலமிது.
பூர்விக சொத்துகளில்ருந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒரு சிலருக்கு பூர்விக
சொத்து கிடைக்கும்.விவசாயிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
நோய்,நொடிகளில் இருந்து இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவர்.
உடல் ஆயுள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பரிகாரம்
மதுரை மாவட்டம் அழகர் கோயில் சென்று பெருமாளை தரிசனம் செய்து
வழிபட்டு வரவும்.தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்.

“ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ம பிரசோதயாத்!”


தமிழ் புத்தாண்டு பலன்கள் 2015 தனுசு ராசி (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்):



தனுசு ராசி நேயர்களே!

தற்போது 7 ½ சனி நடை பெற்று வருவதால் முதல் சுற்று என்றால் இன்னல்களும்,இரண்டவது சுற்று என்றால் சற்று நன்மையான பலன்களும்,மூன்றாவது என்றால் உடல் நலம் சற்று பாதிக்க படுவதுமான பலன்கள் நடைபெறும் உத்தியோகதில் உள்ளவர்கள் மாற்றலாகி வேறு ஊர் அல்லது வெளி நாடு செல்ல நேரிடும்.கல்வித்துறையில் உள்ளவர்கள் மேன்மை அடைவார்கள்.பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ஒரு சிலர் புதிதாக வீடு வாங்கும் யோகம் அடைவார்கள்.உடல் நலத்தில்
அதிக அக்கறை காட்ட வேண்டும்.கண்டதை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்ள வேண்டாம்.தொழில் புரிய
நினைபவர்களுக்கு தொழில் நன்றாக அமையும்.ஒரு சிலர் வீட்டை புதுப்பித்துபராமரிப்பு வேலை செய்வர்.மாணவ மாணவியர் கல்வியில்
சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள்.

அதே சமயம் கவனமுடன் படித்து வரவும்.திருமண வயது உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி
கரமாக இருக்கும்.உறவினர்களுடன் இருந்த மன கசப்பு நீங்கி ஒன்று சேரும் காலமிது.சுய தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட்டால்
தொழில் வளர்ச்சி அடையும்.நிலம்,மனை வாங்கி விற்பவர்கள் நல்ல
லாபம் அடைவார்கள்.விவசாயிகள் லாபம் அடைவார்கள்.
அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல்ல காலமாக அமையும்.
தந்தையின் பூர்விக சொத்துகள் ஒரு சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு
உள்ளது.

பரிகாரம்

திருவாலங்காடு சிவனை தீபம் ஏற்றி வழிபட்டு அர்ச்சனை செய்துவரவும்.
அங்குள்ள மாந்தீஸ்வரரை வணங்கி வரவும்.தினசரி சொல்ல வேண்டிய
மந்திரம்.

“ஓம் ஸ்ரீ மந்த புத்ராய வித்மஹே
ஸ்ரீ சூர்ய பௌத்ராய தீமஹி

தநநோ மாந்தி பிரசோதயாத்!”

Monday 6 April 2015

தமிழ் புத்தாண்டு 2015 ராசிபலன்கள் விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

விருச்சிக ராசி நேயர்களே!


இந்த மன்மத வருடம் தங்களுக்கு அதிக அளவில் தொல்லைகள் தராத
வருடமாகும்.தங்களுக்கு ஜென்ம சனி நடைபெற்று வருவதால் பணம்,பொருள்,ஆபரணங்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
உத்தியோகத்தில் உள்ளவருக்கு உழைப்பு அதிகமாக இருக்கும்.உழைப்பின்
மூலமாக பணவரவு அதாவது சம்பளம் உயர்வதற்கு வாய்ப்புஉண்டு.
தொழில் செய்பவர்கள் உழைப்பின் பலனாக லாபம் அதிகரிக்கும்.
உழைக்காமல் இருந்தால் பணத்திற்கு சிரமப்பட வேண்டீருக்கும்.

வாகனங்கள் வாங்குவதும்,விற்பதும் நடைபெறும்.ஒரு சிலருக்கு வாகனங்கள் பழுதடைதாலும் பராமரிப்பு செய்ய நேரிடும்.ரசாயன
தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும்.தனியார் கம்பனிகளில்
வேலை புரிபவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும்.ஒரு சிலர்
பணி நிமித்தம் காரணமாக வெளி நாடு செல்ல நேரிடும்.
இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்கள் அதிக லாபம் அடைவார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் ஒருவருக்குவர் மனகசப்புடன்
இருப்பார்கள்.உறவினர்களுடன் பகை ஏற்படும்.கவனமாக பேசவும்.
உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கவும்.வண்டி,வாகனங்களில் செல்வோர் கவனமுடன் செல்லவும்
ஒரு சிலருக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.விவசாயிகள் நல்ல லாபம்
பெறுவார்கள்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் சொந்தமாக வீடு வாங்கி
குடி போவார்கள்.பொருளாதாரம் உடல் ஆரோக்கியம் இவைகளில் மிகுந்த
கவனமுடன் இருக்க வேண்டும்.

பரிகாரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு
வரவும்.தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்.

“ஓம் பூர் புவ ஸஉவக
தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோன ப்ரசோதயாத்!”

2015 தமிழ் புத்தாண்டு ஆண்டு பலன்கள் - துலா ராசி

துலா ராசி (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)



துலாம் ராசி நேயர்களே!

இந்த மன்மத வருடம் தங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்து பலன்கள்
நடைபெறும்.தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
ஒரு சிலர் தாய்,தந்தையரை விட்டு பிரிந்து செல்ல நேரிடும்.ஒரு சிலர்
வெளி நாடு செல்வர்.ஒரு சிலருக்கு கண் பார்வை கோளாறு ஏற்படும்.
ஒரு சிலருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.உடல்நலத்தில்
அக்கறையுடன் இருக்க வேண்டும்.காது,மூக்கு,தொண்டையில் ஒரு சிலருக்குபிரச்சினை உண்டாகும்.

ஒரு சிலர் வீடு,மனை வாங்கி மகிழ்வார்கள்.ஒரு சிலர் பழைய வீட்டை புதுப்பித்து வீடு கட்டுவார்கள்.பூமிவகையறாக்கள் மூலமாக லாபம் கிட்டும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும்.புத்திர பாக்கியம்
ஒரு சிலருக்கு ஏற்படும்.பொருளாதரத்தை பொருத்த வரை நல்ல சம்பாத்தியம் கிடைக்கும்.அதற்க்கு தகுந்தார் போல் செலவீனங்களும் அதிகமாக இருக்கும்.முடிந்த வரை சிக்கனமாக செலவு செய்வது நன்மை
பயக்கும்.புனித யாத்திரை குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.குலதெய்வ
வழிபாடுமிகவும் நன்மை அளிக்கும்.

உத்தியோகம் மாற்றம் ஒரு சிலருக்கு பணபற்றாகுறை இருக்காது.ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள்.ரியல்எஸ்டேட் தொழில்புரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.கலை
துறையில் உள்ளவருக்கு ஏற்றம்,இறக்கம் இரண்டும் இருக்கும்.
குரு பெயர்ச்சிக்கு பின் அரசியல்வாதிகளுக்கு நல்ல பதவியில்
வந்துசேரும்.

பரிகாரம்

திருநள்ளார் சென்று சனிஸ்வர பகவானை எள் தீபம் ஏற்றி
அர்ச்சனை செய்து வணங்கி வரவும்.தினசரி வீட்டில் காலையிலும்,
மாலையிலும் விளக்கேற்றி சொல்ல வேண்டிய மந்திரம்.

“ஓம் நிரஞ்ஜனாய வித்மஹே
நிராபாசாய தீமஹி தந்நோ
ஸ்ரீநிவாச பிரசோதயாத்!”