Monday 6 April 2015

2015 தமிழ் புத்தாண்டு ஆண்டு பலன்கள் - துலா ராசி

துலா ராசி (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)



துலாம் ராசி நேயர்களே!

இந்த மன்மத வருடம் தங்களுக்கு நன்மையும் தீமையும் கலந்து பலன்கள்
நடைபெறும்.தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
ஒரு சிலர் தாய்,தந்தையரை விட்டு பிரிந்து செல்ல நேரிடும்.ஒரு சிலர்
வெளி நாடு செல்வர்.ஒரு சிலருக்கு கண் பார்வை கோளாறு ஏற்படும்.
ஒரு சிலருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.உடல்நலத்தில்
அக்கறையுடன் இருக்க வேண்டும்.காது,மூக்கு,தொண்டையில் ஒரு சிலருக்குபிரச்சினை உண்டாகும்.

ஒரு சிலர் வீடு,மனை வாங்கி மகிழ்வார்கள்.ஒரு சிலர் பழைய வீட்டை புதுப்பித்து வீடு கட்டுவார்கள்.பூமிவகையறாக்கள் மூலமாக லாபம் கிட்டும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடி வரும்.புத்திர பாக்கியம்
ஒரு சிலருக்கு ஏற்படும்.பொருளாதரத்தை பொருத்த வரை நல்ல சம்பாத்தியம் கிடைக்கும்.அதற்க்கு தகுந்தார் போல் செலவீனங்களும் அதிகமாக இருக்கும்.முடிந்த வரை சிக்கனமாக செலவு செய்வது நன்மை
பயக்கும்.புனித யாத்திரை குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.குலதெய்வ
வழிபாடுமிகவும் நன்மை அளிக்கும்.

உத்தியோகம் மாற்றம் ஒரு சிலருக்கு பணபற்றாகுறை இருக்காது.ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள்.ரியல்எஸ்டேட் தொழில்புரிபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.கலை
துறையில் உள்ளவருக்கு ஏற்றம்,இறக்கம் இரண்டும் இருக்கும்.
குரு பெயர்ச்சிக்கு பின் அரசியல்வாதிகளுக்கு நல்ல பதவியில்
வந்துசேரும்.

பரிகாரம்

திருநள்ளார் சென்று சனிஸ்வர பகவானை எள் தீபம் ஏற்றி
அர்ச்சனை செய்து வணங்கி வரவும்.தினசரி வீட்டில் காலையிலும்,
மாலையிலும் விளக்கேற்றி சொல்ல வேண்டிய மந்திரம்.

“ஓம் நிரஞ்ஜனாய வித்மஹே
நிராபாசாய தீமஹி தந்நோ
ஸ்ரீநிவாச பிரசோதயாத்!”

No comments: