Wednesday 31 December 2014

2015 - ஆண்டு பலன்கள் - சிம்ம ராசி (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

எதையும்  சாதிக்கும் திறமை பெற்ற சிம்மராசிகாரர்களே!


இந்த புத்தாண்டு தங்களுக்கு சோதனைக்குரிய காலமாகும். ஏனென்றால் இது வரி 3 ஆம் இடத்தில் சனி பகவன் தற்போது நான்காம் எடத்திற்கு வந்துள்ளார்.இதனால் ஆரோக்கியம் பாதிக்கபடும். காலில் அடிபட வாய்ப்பு உண்டு.எலும்பு சம்பந்தமான நோய்களால் பாதிக்கபடலாம்.ஒரு சிலருக்கு ஆப்ரேஷன் நடைபெறலாம். சனி வக்கரம் மார்ச் 3 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை நடைபெறும்.
எடுத்த காரியங்கள் கைகூடும்.வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.தடைகள் பல கடந்து வெற்றி வாய்ப்புகள் உங்களை தேடிவரும். சமூகத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். உங்களை ஏளனமாக பேசியவர்கள் தலைகுனிந்து நிற்ப்பார்கள்.எதையும் சமாளித்து முன்னேற்ற பாதையில் செல்ல ஆரம்பிப்பீர்கள்.

5 ஜூலை குரு ஜென்மத்திற்கு பெயர்ச்சி அடைவதால் சிலர் இடம் விட்டு
இடம் செல்ல நேரிடும்.ஒருசிலர் பெற்றோரை பிரிந்து செல்ல நேரிடும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும்.அவ்வப்போது சிறுசிறு சண்டைகள் வரும்.ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து போவது நல்லது.
ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.ராகு 2 ஆம் இடத்திலும், கேது எட்டாம் இடத்திலும் உள்ளதால் உடல்நிலையில் அக்கறைகாட்டவும். பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படவும்.

உத்தியோக பொறுப்புகள் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் உள்ளவர்கள் கவனமுடன் இருக்கவும், நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
இந்த புத்தாண்டில் இவர்களுக்கு நல்லதும் கெட்டதும் கலந்து காரியங்கள் நடக்கும்.பொருள் களவு போக வாய்ப்பு உண்டு. எதிலும் கவனமுடன் செயல்படவும்.பைரவரை வணங்கி தீபம் ஏற்றி வழி பட்டு வந்தால் நன்மையுண்டாகும்.வியாழன் தோறும் குருபகவான் வழிபட்டு தீபம் ஏற்றி வரவும்.மகாலக்ஷ்மி வழிபட்டு வந்தால் நன்மை நன்மையுண்டாகும்.

Tuesday 30 December 2014

2015 - ஆண்டு பலன்கள் - கடக ராசி (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்):

தன்னம்பிக்கை உடைய கடகராசி அன்பர்களே!

தாங்கள் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் நினைத்தாலும் அந்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டீர்கள். மற்றவர்களிடம் மிகுந்த பாசமும், அன்பும் கொண்டவர்கள்.இதுவரை நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்த சனிபகவான் 5 ஆம் இடத்திர்க்கு வந்துள்ளார்.இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.ஒரு சிலருக்கு இடம் மாற்றம், உத்தியோக மாற்றம் பதவி உயர்வு போன்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உண்டு.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு,மனகசப்பு வர வாய்ப்பு உண்டு.அனுசரித்து போகவும்.ஒரு சிலருக்கு அலைச்சல் ஏற்படும்.மனம் ஒரு நிலையில்இருக்காது. எதையாவது நினைத்து சிந்தனை செய்து கொண்டேஇருக்க நேரிடும்.ஒரு சிலருக்கு சரியான தூக்கம் வராது.

ஜூலை 5 ஆம் தேதிக்கு பிறகு குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.இதனால் பணவரவு அதிகமாகும். தாங்கள் நினைத்த காரியத்தை சாதித்து முடிப்பீர்கள்.ஒரு சிலருக்கு வீடு,வாகனம் யோகம் உண்டாகும்.பெண்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள்.சமூகத்தில் தங்களுக்கு ஒரு மரியாதை, அந்தஸ்து,செல்வாக்கு உண்டாகும்.தொழில்,வியாபாரத்தில் உள்ளவர்கள் நல்லலாபம் அடைவார்கள்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். ஒருவர்க்க்குகொருவர் விட்டு கொடுத்து பாசமாக இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.புத்திர பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் பாசத்துடன் இருப்பார்கள்.செவ்வாய் கிழமை தோறும் முருகன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வந்தால் நன்மை உண்டாகும். முதியவர்களுக்கு உதவி புரிந்து வந்தால் வாழ்வில் எல்லா நலன்களும்

கிடைக்கும்.கந்தசஷ்டி கவசம் படித்து வரவும்.

2015 - ஆண்டு பலன்கள் - மிதுன ராசி (மிருகசிரீஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்)

எதிலும் சிந்தனை செய்து செயல்படும் மிதுனராசிகரரர்களே!

தாங்கள் எதையும் சுயமாக சிந்தித்து செயல்படுபவர்கள்.அடுத்தவரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டீர்கள்.தற்போது சனி உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் மற்றும் குரு 2 ஆம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு ராஜயோகம்தான்.கையில் பணபுழக்கம் அதிகரிக்கும்.எந்த நினைத்த காரியத்தையும் சாதிக்கும்.காலம் இது.புதிதாக இடம் மனை வீடு வாங்குவீர்கள்.வாகன யோகம் உண்டாகும்.வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும்.

எப்போதும்வீட்டில் மகிழ்ச்சியில் திளைத்து கொண்டு இருப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து, புகழ், செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள்ளுக்கு பதவி உயர்வு,சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் நல்லபெயர் கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.அனைத்து  துறைகளிலும் வெற்றி அடைவீர்கள்.

ஜூலை 5 ஆம் தேதி குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படும்.சிறிது மந்த நிலை ஏற்படும்.குருவின் பார்வையால் எதையும் சமாளித்து விடுவீர்கள். அந்த நேரத்தில் சனி வக்கரம் அடையும் காலத்தில் அதாவது 31 ஜூலை வரை எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதம் ஆகலாம்.அக்கம் பக்கத்தில் உள்ள வர்களிடம் அனுசரித்து போகவும்.

பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள்.கணவன் மனைவி இடையே ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடுகள் வரலாம். அனுசரித்து போவது நல்லது.புதன்கிழமை தோறும் பெருமாள்கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வரவும்.வியாழன் அன்று குருபகவானுக்கு

நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும்.

2015 - ஆண்டு பலன்கள் - ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகஸ்ரிஷம் 1,2 பாதங்கள்)

நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ரிஷபராசி அன்பர்களே!

தாங்கள் எப்போதும் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுபவர்கள். தற்போது ஏழாம் இடமான விருச்சிகத்தில் கண்டசனி நடைபெறுவதால் கவலைப்பட வேண்டாம். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனுக்கு சனி நண்பர். பெரிய பாதிப்புகள் எதுவும் நடைபெறாது. பெரியோர்கள் ஆலோசனைகளை கேட்டு செய்தால் எல்லா காரியங்களும் நல்லபடியாக அமையும்.

சில சமயம் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படலாம். எதிலும் நிதானம் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்களை பகைத்து கொள்ள வேண்டாம். இந்த ஆண்டு ஆபரண சேர்க்கை சேரும். மற்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக அமைவதால் தொழில், வியாபாரம் நன்மை உண்டாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் நடந்து கொள்ளவும். வீண் தர்க்கம் வேண்டாம். வண்டி வாகனங்கள் ஒரு சிலர் வாங்க நேரிடும். பொருளாதார சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும்.
மார்ச் 15 முதல் 31 ஜூலை  வரை சனி வக்கிரம் அடைவதால் சமூகத்தில் தங்களுக்கு அந்தஸ்து கிடைக்கும். மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். வாழ்வில் பல முன்னேற்றமான பலனை அனுபவிப்பீர்கள்.

31 ஜூலை பிறகு எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பொருள் விரயம் உண்டாகும். ஜூலை 5 ஆம் தேதி மாறும் குருபகவான் நன்மை தருவார் என்று சொல்ல முடியாது. உடல் நலம் பாதிக்கும். ஆனால் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். வெற்றிலை மாலை வடமாலை சாத்தி வரலாம். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்து வரவும்.
எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்.

2015 - ஆண்டு பலன்கள் - மேஷ ராசி ((அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்):

சாதனை புரிய துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே!

தற்போது தங்களுக்கு அஷ்டம சனி நடைபெற்று வருவதால் எதிலும்நிதானமாக செயல்பட்டு வரவும். தங்களது முன் கோபத்தை குறைத்துகொண்டால் காரியங்களை சாதிக்கலாம். பொருளாதாரத்தை மிகவும் கவனமுடன் கணக்கு போட்டு செலவு செய்யவும். இல்லா விடில் கடன் வாங்க நேரிடும். கடன் வாங்கினால் திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். கடின உழைப்பால் எல்லாவற்றையும் சமாளிக்க நேரிடும். உறவினர்களிடம் கவனமாக பேசவும். தேவை இல்லாத பிரச்சனைகள் ஏற்படும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சனை ஏற்படவாய்ப்பு உண்டு. கவனமாக வேலையில் இருக்கவும். ஒரு சிலருக்கு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சிலருக்கு உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உண்டு. யாரிடமும் பணம் கொடுக்கல் வாங்கல் வைக்க வேண்டாம். 

ஜூலை 5 ஆம் தேதி குருபகவான் சிம்மராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு இவர்களுக்கு யோகமான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீடு வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, பணிநிரந்திரம், சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.

மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை சனி வக்கிர காலமாகும். அந்த நேரத்தில் கோளறுபதிகம் படித்து வரவும். சனிக்கிழமைதோறும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வரவும். பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு வரவும்.

2015 ஆம் ஆண்டு சனி ஆதிக்கத்தில் பிறப்பதால் எதிலும் கவனமுடன் செயல்பட்டு வந்தால் நல்லது,

108 திவ்ய தேசங்கள் பாகம் 6



அற்புத நாராயணன்
திருகடிதானம்,கோட்டயம்
0481-2448455
காட்கரையப்பன்
திருகாக்கரை,எர்ணக்குளம்
0484-6519867
மாயபிரான்
திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா
09447800291
திருகுறளப்பன்
திருவறான் விளை,பத்தினம்திட்டை, கேரளா
0468-2212170
லக்ஷ்மண பெருமாள்
திருமூழிகளம், எர்ணக்குளம்
0484-2473996
இமையவரம்பன்
திருசிற்றாறு, ஆழப்புழா
0479-2466828
அனந்த பத்மநாபன்
திருவனந்தபுரம்
0471-2450233
வெங்கடசலபதி
திருமலை,திருப்பதி
0877-2233333
பிரகலாத வரதன்
அகோபிலம், திருப்பதி
08519-252025
கிருஷ்ணர்
துவாரகை,அகமதாபாத்
02892-235109
ராமர்
அயோத்தி
09415039760/09580717014
பத்ரி நாராயணர்
பத்ரிநாத்

கோவர்தநேசன்
மதுரா,ஆக்ரா

மனமோகன கிருஷ்ணர்
ஆயப்பாடி

பரமபுருஷன்
திருப்ரிதி

தேவராஜன்
நைமிசாரண்யம்

நீலமேக பெருமாள்
தேவப்ரயாகை

முக்தி நாராயணர்
சாளகிராமம்,நேபாளம்

திருப்பாற்கடல்
பள்ளிகொண்ட ரங்கநாதர்

பரமபதம்
பெருமாள்

அற்புத நாராயணன்
திருகடிதானம்,கோட்டயம்
0481-2448455
காட்கரையப்பன்
திருகாக்கரை,எர்ணக்குளம்
0484-6519867
மாயபிரான்
திருப்புலியூர், ஆழப்புழா, கேரளா
09447800291
திருகுறளப்பன்
திருவறான் விளை,பத்தினம்திட்டை, கேரளா
0468-2212170
லக்ஷ்மண பெருமாள்
திருமூழிகளம், எர்ணக்குளம்
0484-2473996
இமையவரம்பன்
திருசிற்றாறு, ஆழப்புழா
0479-2466828
அனந்த பத்மநாபன்
திருவனந்தபுரம்
0471-2450233
வெங்கடசலபதி
திருமலை,திருப்பதி
0877-2233333
பிரகலாத வரதன்
அகோபிலம், திருப்பதி
08519-252025
கிருஷ்ணர்
துவாரகை,அகமதாபாத்
02892-235109
ராமர்
அயோத்தி
09415039760/09580717014
பத்ரி நாராயணர்
பத்ரிநாத்

கோவர்தநேசன்
மதுரா,ஆக்ரா

மனமோகன கிருஷ்ணர்
ஆயப்பாடி

பரமபுருஷன்
திருப்ரிதி

தேவராஜன்
நைமிசாரண்யம்

நீலமேக பெருமாள்
தேவப்ரயாகை

முக்தி நாராயணர்
சாளகிராமம்,நேபாளம்

திருப்பாற்கடல்
பள்ளிகொண்ட ரங்கநாதர்

பரமபதம்
பெருமாள்