தன்னம்பிக்கை உடைய கடகராசி அன்பர்களே!
தாங்கள் எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும்
நினைத்தாலும் அந்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டீர்கள். மற்றவர்களிடம் மிகுந்த பாசமும், அன்பும் கொண்டவர்கள்.இதுவரை
நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்த சனிபகவான் 5
ஆம் இடத்திர்க்கு வந்துள்ளார்.இதனால் குடும்பத்தில்
பிரச்சனைகள் உண்டாகும்.ஒரு சிலருக்கு இடம் மாற்றம், உத்தியோக
மாற்றம் பதவி உயர்வு போன்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு
உண்டு.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு,மனகசப்பு வர வாய்ப்பு உண்டு.அனுசரித்து போகவும்.ஒரு
சிலருக்கு அலைச்சல் ஏற்படும்.மனம் ஒரு நிலையில்இருக்காது. எதையாவது நினைத்து
சிந்தனை செய்து கொண்டேஇருக்க நேரிடும்.ஒரு சிலருக்கு சரியான தூக்கம் வராது.
ஜூலை 5 ஆம் தேதிக்கு பிறகு குரு சிம்ம ராசிக்கு
பெயர்ச்சி அடையும் போது உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.இதனால் பணவரவு
அதிகமாகும். தாங்கள் நினைத்த காரியத்தை சாதித்து
முடிப்பீர்கள்.ஒரு சிலருக்கு வீடு,வாகனம் யோகம் உண்டாகும்.பெண்கள் தங்கள்
விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள்.சமூகத்தில் தங்களுக்கு
ஒரு மரியாதை, அந்தஸ்து,செல்வாக்கு உண்டாகும்.தொழில்,வியாபாரத்தில்
உள்ளவர்கள் நல்லலாபம் அடைவார்கள்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு
அதிகரிக்கும். ஒருவர்க்க்குகொருவர் விட்டு கொடுத்து பாசமாக
இருப்பார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.புத்திர
பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் பாசத்துடன் இருப்பார்கள்.செவ்வாய்
கிழமை தோறும் முருகன் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வந்தால்
நன்மை உண்டாகும். முதியவர்களுக்கு உதவி புரிந்து வந்தால் வாழ்வில்
எல்லா நலன்களும்
கிடைக்கும்.கந்தசஷ்டி கவசம் படித்து வரவும்.
No comments:
Post a Comment