எதிலும் சிந்தனை செய்து செயல்படும் மிதுனராசிகரரர்களே!
தாங்கள் எதையும் சுயமாக சிந்தித்து
செயல்படுபவர்கள்.அடுத்தவரின் ஆலோசனைகளை ஏற்க மாட்டீர்கள்.தற்போது சனி உங்கள்
ராசிக்கு 6 ஆம் இடத்தில் மற்றும் குரு 2 ஆம் இடத்தில் இருப்பதால் உங்களுக்கு ராஜயோகம்தான்.கையில்
பணபுழக்கம் அதிகரிக்கும்.எந்த நினைத்த காரியத்தையும் சாதிக்கும்.காலம் இது.புதிதாக
இடம் மனை வீடு வாங்குவீர்கள்.வாகன யோகம் உண்டாகும்.வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும்.
எப்போதும்வீட்டில் மகிழ்ச்சியில் திளைத்து
கொண்டு இருப்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து, புகழ், செல்வாக்கு கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள்ளுக்கு பதவி உயர்வு,சம்பள உயர்வு
போன்றவை கிடைக்கும்.ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும்
யோகம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் நல்லபெயர் கிடைக்கும்.தொழில்
வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.அனைத்து துறைகளிலும் வெற்றி அடைவீர்கள்.
ஜூலை 5 ஆம் தேதி குரு சிம்ம ராசிக்கு பெயர்ச்சி
அடையும் போது உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்படும்.சிறிது
மந்த நிலை ஏற்படும்.குருவின் பார்வையால் எதையும் சமாளித்து
விடுவீர்கள். அந்த நேரத்தில் சனி வக்கரம் அடையும் காலத்தில்
அதாவது 31 ஜூலை வரை எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு
கிடைக்க வேண்டிய சலுகைகள் தாமதம் ஆகலாம்.அக்கம்
பக்கத்தில் உள்ள வர்களிடம் அனுசரித்து போகவும்.
பெண்கள் முன்னேற்றம் அடைவார்கள்.கணவன் மனைவி இடையே ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடுகள்
வரலாம். அனுசரித்து போவது நல்லது.புதன்கிழமை தோறும்
பெருமாள்கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வரவும்.வியாழன் அன்று
குருபகவானுக்கு
நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் நன்மை உண்டாகும்.
No comments:
Post a Comment