Friday 5 December 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 பாதங்கள்,ரோஹிணி,மிருகஸ்ரிஷம் 1,2 பாதங்கள்):


காரியத்தில் கண்ணாய் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களே! இதுவரை 6 ஆம் இடத்தில் இருந்த சனிபகவான் தற்போது 7 ஆம் இடத்திற்கு கண்டச்சனியாக வருகிறார். இதுவரை ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவித்து வந்த தாங்கள் மிகுந்த கவனமுடன் செயல் படவேண்டும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். அலைச்சல் அதிகப்படும். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். இருவருக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். சிலர் வெளியூர் செல்ல நேரிடும். கோச்சாரப்படி கிரகங்கள் மாறும் போது நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மொத்தத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


பரிகாரம்:  சனிஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வரவும்.காகத்திறக்கு எள் சாதம் வைக்கவும்.வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு தீபம் ஏற்றி வரவும்.


No comments: