எதையும்
குறிப்பறிந்து செயலாற்றும் தனுசு ராசிக்காரர்களே! இதுவரை 11-ம் இடத்தில் இருந்து நன்மை செய்து வந்த சனீஸ்வர பகவான்
தற்போது விரயஸ்தானமான 12-ம் இடத்திற்கு வந்துள்ளார். இதனால் வீண் விரயம்
ஏற்படும். தர்க்கங்களை தவிர்க்கவும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். பகைவர்களால்
தொல்லை ஏற்படும். பொருள் களவு போக வாய்ப்புண்டு. கவனமாக இருக்கவும். ஒரு சிலர்
வீட்டை விற்க முயற்சி செய்வர். அல்லது வீடு பராமரிப்பு வேலைகள் செய்ய
வேண்டியதிருக்கும். ஒரு சிலர் வீட்டில் திருமணங்கள் நடைபெற வாய்ப்புண்டு. வீண்
விரயமாவதை தெய்வ வழிபாட்டால் குறைக்க முடியும்.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டு வரவும். சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தி வணங்கி வரவும்.
No comments:
Post a Comment