சுய பலத்துடன் செயல்படும் கடகராசிக்காரர்களே!
இதுவரை 4-ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக இருந்த சனிபகவான் தற்போது 5-ம் இடமான
விருச்சிகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இது மிகவும் நல்ல இடம் என்று கூற முடியாது.
இருந்தாலும் 4-ம் இடத்தில் இருக்கும்போது ஏற்பட்ட தடங்கல்கள் மாறி நல்லதே
நடைபெறும். தற்போது தாங்கள் சாமர்த்தியமாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும்.
குடும்பத்தில் வீண் பேச்சுகள் பேச வேண்டாம். உத்தியோக உயர்வு, பொருளாதாரத்தில்
முன்னேற்றம். ஒரு சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கணவனிடத்தில்
வாக்குவாதம் வேண்டாம். குருபெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேற்றம்
உண்டு.
பரிகாரம்: பௌர்ணமியன்று சத்தியநாராயணா பூஜை செய்து வந்தால் யோக பலன் கிட்டும். திங்கட்கிழமை சிவன் கோவிலுக்குச் சென்று தீபம் ஏற்றி சிவபெருமானை வழிபட்டு வரவும்.
No comments:
Post a Comment