சாதனை புரிய துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே!
தற்போது தங்களுக்கு அஷ்டம சனி நடைபெற்று வருவதால் எதிலும்நிதானமாக செயல்பட்டு வரவும். தங்களது முன் கோபத்தை குறைத்துகொண்டால் காரியங்களை சாதிக்கலாம். பொருளாதாரத்தை மிகவும் கவனமுடன் கணக்கு போட்டு செலவு செய்யவும். இல்லா விடில் கடன் வாங்க நேரிடும். கடன் வாங்கினால் திருப்பி செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். கடின உழைப்பால் எல்லாவற்றையும் சமாளிக்க நேரிடும். உறவினர்களிடம் கவனமாக பேசவும். தேவை இல்லாத பிரச்சனைகள் ஏற்படும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பிரச்சனை ஏற்படவாய்ப்பு உண்டு. கவனமாக வேலையில் இருக்கவும். ஒரு சிலருக்கு பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சிலருக்கு உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வர வாய்ப்பு உண்டு. யாரிடமும் பணம் கொடுக்கல் வாங்கல் வைக்க வேண்டாம்.
ஜூலை 5 ஆம் தேதி குருபகவான் சிம்மராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு இவர்களுக்கு யோகமான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீடு வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, பணிநிரந்திரம், சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
ஜூலை 5 ஆம் தேதி குருபகவான் சிம்மராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன் பிறகு இவர்களுக்கு யோகமான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். வீடு வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, பணிநிரந்திரம், சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.
மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூலை 3 ஆம் தேதி வரை சனி வக்கிர காலமாகும். அந்த நேரத்தில் கோளறுபதிகம் படித்து வரவும். சனிக்கிழமைதோறும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வரவும். பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு வரவும்.
2015 ஆம் ஆண்டு சனி ஆதிக்கத்தில் பிறப்பதால் எதிலும் கவனமுடன் செயல்பட்டு
வந்தால் நல்லது,
No comments:
Post a Comment