சாதுர்யமாக பேசி காரியம் சாதிக்கும் கன்னி
ராசிக்காரர்களே! இதுவரை உங்களை 7 ½ ஆண்டுகளாக ஆட்டிப்
படைத்த சனீஸ்வர பகவான், தற்போது முழுவதுமாக உங்களை விட்டு 3-ம் இடத்திற்கு
செல்கிறார். இனிமேல் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது. கணவன், மனைவிக்குள்
சந்தோஷம் ஏற்படும். புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டு. சுபநிகழ்ச்சிகள்
நடைபெறும். உறவினர், நண்பர்களிடத்திலுள்ள பகை நீங்கி உறவு பலப்படும். ஒரு
சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. ராகு ஜென்மத்தில் உள்ளதால், ராகு, கேது
ப்ரீதி செய்யவும்.
பரிகாரம்: வியாழக்கிழமை
குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.
திருநாகேஸ்வரம் சென்று வரவும். விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று தீபம் ஏற்றி
வழிபட்டு வரவும்.
No comments:
Post a Comment