பாசமும்,
அன்பும் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே! இதுவரை விரயஸ்தானமான 12-ம் இடத்தில் இருந்த
சனிபகவான், தற்போது ஜென்மச்சனியாக உங்கள் ராசிக்கே வந்துள்ளார். இதனால் தங்களின்
முன்கோபத்தை தயவு செய்து அடக்கிக்கொள்ளுங்கள். முன்கோபத்தினால் பல தீய விளைவுகள்
ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் வழக்குகளில் சிக்கிக் கொள்வீர்கள். ஒரு சிலருக்கு
இடமாற்றம் ஏற்படும். உத்தியோகம், தொழிலில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு. மிகுந்த
கவனமுடன் இருக்கவும். பொருள் விரயம், வீண் அலைச்சல் ஏற்படும். பொறுமையுடன்
செயல்படவும்.
பரிகாரம்: திருநள்ளாறு
சனீஸ்வர பகவானை வழிபட்டு வரவும். சனிக்கிழமை தோறும் காகத்திற்கு எள் சாதம்
வைக்கவும். ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.
No comments:
Post a Comment