எதையும் சாதிக்கும் திறமை பெற்ற சிம்மராசிகாரர்களே!
இந்த புத்தாண்டு தங்களுக்கு சோதனைக்குரிய
காலமாகும். ஏனென்றால் இது வரி 3 ஆம் இடத்தில் சனி
பகவன் தற்போது நான்காம் எடத்திற்கு வந்துள்ளார்.இதனால்
ஆரோக்கியம் பாதிக்கபடும். காலில் அடிபட வாய்ப்பு உண்டு.எலும்பு சம்பந்தமான
நோய்களால் பாதிக்கபடலாம்.ஒரு சிலருக்கு ஆப்ரேஷன் நடைபெறலாம். சனி வக்கரம் மார்ச் 3 ஆம் தேதி முதல் 31 ஆம்
தேதிவரை நடைபெறும்.
எடுத்த காரியங்கள் கைகூடும்.வம்பு வழக்குகள்
உங்களுக்கு சாதகமாக அமையும்.தடைகள் பல கடந்து வெற்றி வாய்ப்புகள்
உங்களை தேடிவரும். சமூகத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். உங்களை
ஏளனமாக பேசியவர்கள் தலைகுனிந்து நிற்ப்பார்கள்.எதையும் சமாளித்து
முன்னேற்ற பாதையில் செல்ல ஆரம்பிப்பீர்கள்.
5 ஜூலை குரு ஜென்மத்திற்கு பெயர்ச்சி அடைவதால்
சிலர் இடம் விட்டு
இடம் செல்ல நேரிடும்.ஒருசிலர் பெற்றோரை பிரிந்து
செல்ல நேரிடும். கணவன் மனைவி இடையே அன்பு குறையும்.அவ்வப்போது
சிறுசிறு சண்டைகள் வரும்.ஒருவருக்கு ஒருவர் விட்டு
கொடுத்து போவது நல்லது.
ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.ராகு 2 ஆம்
இடத்திலும், கேது எட்டாம் இடத்திலும் உள்ளதால் உடல்நிலையில் அக்கறைகாட்டவும். பணியில் இருப்பவர்கள்
கவனமுடன் செயல்படவும்.
உத்தியோக பொறுப்புகள் அதிகமாகும். தொழில், வியாபாரத்தில்
உள்ளவர்கள் கவனமுடன் இருக்கவும், நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள்
உண்டு.
இந்த புத்தாண்டில் இவர்களுக்கு நல்லதும்
கெட்டதும் கலந்து காரியங்கள் நடக்கும்.பொருள் களவு போக வாய்ப்பு
உண்டு. எதிலும் கவனமுடன் செயல்படவும்.பைரவரை வணங்கி
தீபம் ஏற்றி வழி பட்டு வந்தால்
நன்மையுண்டாகும்.வியாழன் தோறும் குருபகவான் வழிபட்டு தீபம் ஏற்றி
வரவும்.மகாலக்ஷ்மி வழிபட்டு வந்தால் நன்மை நன்மையுண்டாகும்.
No comments:
Post a Comment