Sunday 29 March 2015

2015 தமிழ் புத்தாண்டு பலன்கள் கன்னி ராசி (உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள்):

கன்னி ராசி நேயர்களே!


இந்த மன்மத வருடம் தாங்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றும் காலமாகும்.தாங்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் நல்ல பெயரும் புகழும் ஏற்படும்.திருமணம் ஆகதர்வர்களுக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.

புத்திர பாக்கியம் உண்டாகும்.ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.புத்திரபாக்கியம் உண்டாகும்.ஒரு சிலர் குடும்பத்தை பிரிந்து வாழநேரிடும்.கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள்  உண்டாகும்.

இருவரில் ஒருவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும்.உடல் நலத்தில்
கவனம் தேவை.ஜூலை 5 ஆம் தேதிக்கு பிறகு குரு சிம்மத்திற்கு ஜென்மைகுருவாகவருவதால் கன்னி ராசிகாரர்களுக்கு விரய குருவாக வருகிறார். இதனால் ஒரு சிலருக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும்.
அல்லது பழைய வீட்டை இடித்துத் பராமரிக்கும் வேலை ஏற்படும்.
08.01.2016 அன்று ராகு,கேது பெயர்ச்சி வருவதால் தங்களை பிடித்து இருந்த
ஜென்ம ராகு தங்களை விட்டு விலகுகிறார்.

இதனால் கணவன் மனைவிக்குள்  ஒற்றுமை உண்டாகும்.உடல்நலம்
இல்லதவர்கள் உடல் நலம் தேறிவருவர்.ஒரு சிலர் வாகனம் வாங்கி
மகிழ்வார்கள்.பொருளாதரத்தில் மேன்மை உண்டாகும்.தாய்,தந்தையருக்கு
பிள்ளைகளுடன் இருந்த குறைகள் நீங்கி சந்தோஷத்துடன் இருப்பார்கள்.

பரிகாரம்

ஷ்ரிடி சாய் பாபாவை தரிசனம் செய்து வழிபட்டு வரவும்.
நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டு அர்ச்சனை செய்து வரவும்.தினசரி கீழ்க்கண்ட மந்திரத்தை வீட்டில் விளக்கேற்றி சொல்லி வரவும்.

“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி

தநநோ ஹனுமந்த் பிரசோதயாத்!”

2015 - தமிழ் ஆண்டு பலன்கள் - சிம்ம ராசி (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

சிம்மராசி நேயர்களே!



இந்த தமிழ் புத்தாண்டு மன்மத வருடம் தங்களுக்கு நன்மையும்,தீமையும்
கலந்து நடக்கும் வருடமாகும்.முதலில் உடல் நலத்தில் கவனமுடன் இருக்க வேண்டும்.தேவை இல்லாத டென்ஷன் உண்டாகும்.அதனால் உடல்நலம் பாதிக்க கூடும்.டென்ஷன் இல் இருந்து விடுபட ஆன்மீகத்தில்
ஈடுபாடு கொள்ள வேண்டும்.

தெய்வ வழிபாட்டின் மூலமாக டென்ஷன்னைகுறைக்கலாம்.கோர்ட் வழக்குகளில் பிரச்சனைகள் இருந்தாலும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.தெய்வ வழிபாடுகள் விடாமல் செய்யவும்.ஜூலை மாதம் 7 ஆம் தேதிக்கு பிறகு ஜென்மத்தில் குரு தங்களது ராசிக்கு ஐந்து எட்டுக்கு உடைய வனாக இருப்பதால் தங்களுக்கு கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்.

தங்களது சகோதர,சகோதரிகளிடம் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும்.
சொத்து பிரச்சனைகளில் அவர்களுக்கு சேர வேண்டிய பாகத்தை கொடுத்து விடவும். இதனால் அவர்கள் மனஉளைச்சல் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.ஒருவர்குஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.வயதுக்கு வந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் கைகூடும்.பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம்

காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வரவும்.ஞாயிறு மாலை 4 ½  to 6 பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி 9 வாரம் அர்ச்சனை செய்து வரவும்.1௦ தாவது வாரம் தேங்காயில் நல்லெண்ணெய்
ஊற்றி இரண்டு தேங்காயில் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால் ஆயுள்,ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்

“ஓம் காளிகையைச வித்மஹே
ச்மாசன வாசசின்ய தீமஹி

தநநோ கோரப்ரசோதயாத்!”

2015 - தமிழ் ஆண்டு பலன்கள் - கடக ராசி (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்):

கடகராசி நேயர்களே!


இந்த மன்மத வருடம் தங்களுக்கு பல வழிகளில் அலைச்சல் உண்டாகும்.
உத்தியோகத்தில் மாறுதலாகி செல்ல நேரிடும்.அதன் மூலம் ஒரு சிலர் குடும்பத்தை பிரிந்து செல்ல நேரிடும்.கணவன்,மனைவி இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒருவருக்கொருவர் கோபத்தை குறைத்து கொண்டு விட்டு கொடுத்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.ஜூலை மாதத்திற்கு பிறகு ஒரு சிலர் புதிய வீடு வாங்கி குடியேறுவர்.வாகன யோகமும் ஏற்படும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.உத்தியோகம் இல்லாதவர்களுக்குவேலைகிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவர்.ஒரு சிலர் புதிய தொழில்
தொடங்குவர். 08.01.2016 பிறகு ராகு,கேது பெயர்ச்சி அடைவதால் செலவீனங்களை கட்டுபடுத்தவும்.உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படவும்.இல்லவிட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்
திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டு வரவும்.
ராமேஸ்வரம் சென்று வரவும்.தினசரி வீட்டில் விளக்கு ஏற்றி கீழ்க்கண்ட
மந்திரத்தை சொல்லி வரவும்.

“ஓம் குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவ மகேஷ்வர குரு சாட்சாத்
பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!”

2015 - தமிழ் ஆண்டு பலன்கள் - மிதுன ராசி (மிருகசிரீஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்)

மிதுன ராசி நேயர்களே!


இந்த மன்மத வருடம் தங்களது சுய பலத்தினால் பல வெற்றிகளை
செய்து சாதனைகள் புரியும் வருடமாக அமைகிறது.சொந்தமாகதொழில்
செய்து பல வழிகளில் சம்பாதிக்கும் நபராக  திகழ்வீர்கள்.பலரது
பாராட்டையும் பெறுவீர்கள்.ஒரு சிலர் நிலம்,வீடு,மனை வாங்கி மகிழ்வீர்கள்.

ஒரு சிலருக்கு கிரகப்ரேவேசம் செய்யும் நேரமாக அமையும்.
வாகனங்கள் புதிதாக வாங்கி சந்தொஷபடுவீர்கள்.அரசாங்கத்தின் மூலமாக
ஒரு சிலர் ஆதாயம் பெறுவார்கள்.ஒரு சிலருக்கு விருதுகள் கிடைக்கும்.
பிள்ளைகளின் படிப்பிக்காக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
ஜூலை மாதத்திற்கு பிறகு சகோதிர்களின் திருமணம் ஒரு சிலருக்கு
கைகூடும்.அதன் மூலம் ஆடம்பர செலவுகள் ஏற்படும்.கையில் அடிபட நேரிடும்.கவனமுடன் செயல்படவும்.தாய்,தந்தையரை ஒரு சிலர்பிரிந்து
செல்ல நேரிடும்.

ஆறாம் இடத்தில் சனி உள்ளதால் நோய் அல்லது கடன் ஏற்பட வாய்ப்பு உண்டு.உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்கவும்.கண்டதை வாங்கி
சாப்பிடாதீர்கள்.அதனால் அவஸ்தை பட நேரிடும்.ஒரு சிலர் கடன் வாங்கி தொழில் தொடங்குவர்.கடன் மூலமாக வீடு,மனை வாங்குவீர்.
மொத்ததில் இந்த மன்மத வருடம் தங்களுக்கு பல வழிகளில் நன்மைகளை செய்யும் வருடமாக அமையும்.

பரிகாரம்
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.
தினசரி வீட்டில் விளக்கேற்றி சொல்ல வேண்டிய மந்திரம்.
“ஓம் காத்யாயனாயை வித்மஹே
கன்யாகுமரிச தீமஹி

தநநோ துர்கி ப்ரசோதயாத்!”

Saturday 28 March 2015

2015 - ஆண்டு பலன்கள் - ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகஸ்ரிஷம் 1,2 பாதங்கள்)

நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ரிஷபராசி அன்பர்களே!



இந்த மன்மத வருடம் தங்களுக்கு பல வழிகளில் நன்மை செய்யும்.
பிரிந்த தாய்,தந்தையருடன் சேர்வர்.தாய்,தந்தையர்க்கு இருந்து
வந்த உடல் உபாதைகள் நீங்கி பூரண நலம் பெறுவார்கள்.பிள்ளைகளால் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.
ஒருசிலர் வேலை நிமித்தமாக வெளிநாடு போகும் வாய்ப்பு பெறுவார்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.குடும்பத்தில்
மகிழ்ச்சி உண்டாகும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்
கைகூடும்.பொன்,பொருள் சேர்கை உண்டாகும்.அதே சமயம் தங்களுக்கு கண்டசனி நடைபெற்று வருவதால் கணவன்,
மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒருவர்க்க்குகொருவர் விட்டு கொடுத்து  வாழ பழகி கொள்ள வேண்டும்.

வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் செல்லவும். இல்லா விட்டால்
விபத்துக்கள் உண்டாகும்.பொருளாதரத்தில் மேன்மை உண்டாகும்.கல்வியில் மேன்மை உண்டு.ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

பரிகாரம்

திருவண்ணாமலை கிரிவலம் சென்று வரவும்.ஒவ்வொரு பிரதோஷம் அன்று
சிவபெருமானை வழிபட்டு வரவும்.தினசரி வீட்டில் விளக்கேற்றி கீழ்க்கண்ட
மந்திரத்தை சொல்லி வந்தால் வாழ்க்கை வளமாக அமையும்.

"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேனாய தீமஹி
தநநோ ருத்திர ப்ரசோதயாத்!"


2015 - தமிழ் ஆண்டு பலன்கள் - மேஷ ராசி ((அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

சாதனை புரிய துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே!




இந்த வருடம் கடக லக்னத்தில் குரு உச்சம் பெற்று சந்திரனை 
பார்ப்பதால் தங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றி
உண்டாகும்.தங்களிடம் போட்டி போடுபவர்கள் காணாமல் போய்
விடுவர்.சுக்ரன் ஆட்சி பெற்று உள்ளதால் பூர்விக சொத்துகளிலேருந்த  பிரச்சனைகள் நீங்கி சொத்து சேர்கை உண்டாகும்.ஒரு சிலர் புதிதாக வீடு,மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

தந்தையால் ஒரு சிலருக்கு நன்மை உண்டாகும்.வாகனம் ஒரு சிலர் புதிதாக வாங்குவார்கள்.வழக்குகளில் வெற்றி பெற்று அதன் மூலம் ஒரு சிலர் நன்மை அடைவார்கள். அதே சமயம் இந்த
ராசிகாரர்களுக்கு அஷ்டம சனி நடைபெற்று வருவதால் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.உஷ்ண சம்பந்தப்பட்ட
வியாதிகளால் அவஸ்தைபடுவார்கள்.

ஒரு சிலருக்கு ஆபரேஷன் நடக்க வாய்ப்பு உண்டு.சர்க்கரை
நோய்,பிரஷர் போன்றவை உண்டாகும்.எலும்பு சம்பந்தப்பட்ட
பிரச்சனைகளும் ஏற்படும்.மொத்ததில் உடல் ஆரோக்யத்தில் 
கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம்
ஏற்றி வழிபட்டு வரவும்.பெருமாள் கோயில்,ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வரவும்.திருப்பதி வெங்கடசலபதியை
ஒருமுறை தரிசனம் செய்து வரவும்.தினசரி சொல்ல வேண்டிய
மந்திரம் (தீபம் ஏற்றி சொல்லி வரவும்)

"ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்!"




Monday 23 March 2015

தமிழ் புத்தாண்டு பொது பலன்கள் 2015



இந்த வருடம் பிறக்கும் தமிழ் புத்தாண்டு மன்மத வருஷம் ஆகும்.
சித்திரை மாதம் 1 ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை பகல் 12.33 மணிக்கு
அவிட்ட நட்சத்திரம் 2 ஆம் பாதம் கடக லக்னத்தில் மங்களகரமான
மன்மத வருஷம் பிறக்கிறது.இந்த வருஷம் ராஜாவாக சனிஸ்வர பகவானும் மந்திரியாக அங்காரகனும் இருப்பதால் சித்திரை,வைகாசி
மாதம் வெப்பம் மற்ற வருடங்களை விட சற்று அதிகமாக இருக்கும்.
வெப்ப சலனத்தின் காரணமாக மழையும் இருக்கும்.மழைகாலங்களில்
அதிகமான மழையும் உண்டு.மலை சரிவுகளில் நிலசரிவு ஏற்பட்டு விபத்துக்கள் உண்டாகும்.தீ விபத்துக்கள் ஏற்படும்.நிலை அதிர்வுகள்
ஏற்படும்.

இந்தவருடம் குருபெயர்ச்சி (5.07.2015)
ஞாயிறு கிழமை இரவு 11.௦2 மணிக்கு ஆயில்ய நட்சத்திரம் 4 ஆம்
பாதம் கடகராசியில் இருந்து குருபகவான் மக நட்சத்திரம் 1 ஆம்
பாதம் சிம்ம ராசியில் பிரவேசிக்கிறார்.21.12.2015 மார்கழி மாதம் 5 ஆம் தேதி திங்கள்கிழமை உத்திரம் 2ஆம் பாதத்தில் கன்னி ராசிக்கு அதிசாரம் பெற்று தை மாதம் 24 ஆம்தேதி (7.02.2016) ஞாயிறு கிழமை உத்திரம் 1ஆம் பாதத்தில் அதிசாரத்தைமுடிக்கிறார்.

ராகுபெயர்ச்சி
மன்மத வருஷம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி (8.01.2016) வெள்ளிக்கிழமை
பகல் 12.37 க்கு ராகு பகவான் உத்திர நட்சத்திரம் 2 ஆம் பாதம்கன்னிராசியில் இருந்து உத்திர நட்சத்திரம் 1 ஆம் பாதம் சிம்மராசிக்கு பெயர்சி அடைகிறார்.

கேது பெயர்ச்சி
மன்மத வருஷம் மார்கழி மாதம் 23 ஆம் தேதி (8.01.2016) வெள்ளிக்கிழமை
பகல் 12.37 க்கு கேது பகவான் பூரட்டாதி நட்சத்திரம்  4 ஆம் பாதம் மீன

ராசியில் இருந்து பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம் கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.இதனால் ஏற்படும் பலன்களை ஒவ்வொரு ரசிக்கும்என்ன என்பதை தினமும் பார்க்கலாம்.

Saturday 7 March 2015

திருநின்றவூர் பக்தவச்சலபெருமாள் கோயில்




வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவை பிரிந்து திருவாகிய
மகாலட்சுமி நின்ற ஸ்தலம் என்பதால் “திருநின்றவூர்” என்ற பெயர் ஏற்பட்டது.பிரிந்த தாயாருக்கு காட்சி தந்து மகாவிஷ்ணு மணந்து
கொண்டதல் சுக்கிர தோஷம்  உடையவர்கள்  இங்கு வந்து வழிபட்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.பங்குனி மாதம்
தேய்பிறை திருவோண நட்சத்திரத்தில் வரஹா அவதாரம் எடுத்து
காட்சி தந்ததால் இந்நாளில் பக்தவச்சல பெருமாளை வழிபட்டால்
சுக்கிர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

மாங்கல்ய தோஷம் உடையவர்கள் கணவனை பிரிந்த பெண்கள்
ஒரு தாலி வாங்கி வந்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அதை தாயார்
பாதத்தில் வைத்து பூஜை செய்து தருவார்.அதை அணிந்து கொண்டு பழைய தாலியை கழற்றி விடுவார்கள்.இதனால் தங்களுக்கு மறு
வாழ்வு கிடைக்கும்  என நம்புகிறார்கள்.
மகளின் வாழ்க்கை நன்றாக அமைய தாயாரிடம் பெற்றோர்கள் வேண்டி கொண்டால் நல்ல வாழ்க்கை அமையும்.தாயார் சன்னதியில் குபேர எந்திரம் தரபடுகிறது.அதை வாங்கி வீட்டில்
வைத்து 9 நாட்கள் வழிபட்டு பூஜை செய்து கோவிலில் ஒப்படைத்து
விடவேண்டும்.ஒன்பது சுமங்கலிகளுக்கு வெற்றிலை,பாக்கு,மஞ்சள்,
பூ தந்து வந்தால் லக்ஷ்மி கடாச்சம் கிடைக்கும்.செல்வா விருத்திக்காக குபேர எந்திரம் வைத்து வைபவ லக்ஷ்மி பூஜை செய்கின்றனர்.

நாகதோஷம்,களத்திரதோஷம் உடையவர்கள் பால்,பாயசம்
நிவேத்தியம் செய்து 12 குழந்தைகளுக்கு வாழைபழம் கொடுத்து
வேண்டி கொண்டால் தோஷம் நீங்கும்.கை,கால்,காது தொடர்பான
பிரச்சனைகள் உடையவர்கள் ஜென்ம நட்சத்திரம்,ஆயில்யம்
நட்சத்திரம் அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நிவர்த்தி உண்டாகும்.

இதய நோய் உள்ளவர்கள்  இக்கோயிலுக்கு அருகே உள்ள
திரு இருதயாலீஷ்வரரை வழிபட்டால் நிவர்த்தி உண்டாகும்.

இருப்பிடம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் பஸ்களில் சென்றால் திருநின்றவூரை அடையலாம்.
சென்னையில் இருந்து 33 கி.மீ தூரம் உள்ளது.ரயில்வே ஸ்டேஷநில்
இருந்து 1 கி.மீ தூரத்தில் கோயில் உள்ளது.

திறக்கும் நேரம்

காலை 7.3௦ to 11.3௦
மாலை 4.30 to 8.3
போன்: ௦44-26390434