Sunday 29 March 2015

2015 - தமிழ் ஆண்டு பலன்கள் - மிதுன ராசி (மிருகசிரீஷம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்)

மிதுன ராசி நேயர்களே!


இந்த மன்மத வருடம் தங்களது சுய பலத்தினால் பல வெற்றிகளை
செய்து சாதனைகள் புரியும் வருடமாக அமைகிறது.சொந்தமாகதொழில்
செய்து பல வழிகளில் சம்பாதிக்கும் நபராக  திகழ்வீர்கள்.பலரது
பாராட்டையும் பெறுவீர்கள்.ஒரு சிலர் நிலம்,வீடு,மனை வாங்கி மகிழ்வீர்கள்.

ஒரு சிலருக்கு கிரகப்ரேவேசம் செய்யும் நேரமாக அமையும்.
வாகனங்கள் புதிதாக வாங்கி சந்தொஷபடுவீர்கள்.அரசாங்கத்தின் மூலமாக
ஒரு சிலர் ஆதாயம் பெறுவார்கள்.ஒரு சிலருக்கு விருதுகள் கிடைக்கும்.
பிள்ளைகளின் படிப்பிக்காக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.
ஜூலை மாதத்திற்கு பிறகு சகோதிர்களின் திருமணம் ஒரு சிலருக்கு
கைகூடும்.அதன் மூலம் ஆடம்பர செலவுகள் ஏற்படும்.கையில் அடிபட நேரிடும்.கவனமுடன் செயல்படவும்.தாய்,தந்தையரை ஒரு சிலர்பிரிந்து
செல்ல நேரிடும்.

ஆறாம் இடத்தில் சனி உள்ளதால் நோய் அல்லது கடன் ஏற்பட வாய்ப்பு உண்டு.உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருக்கவும்.கண்டதை வாங்கி
சாப்பிடாதீர்கள்.அதனால் அவஸ்தை பட நேரிடும்.ஒரு சிலர் கடன் வாங்கி தொழில் தொடங்குவர்.கடன் மூலமாக வீடு,மனை வாங்குவீர்.
மொத்ததில் இந்த மன்மத வருடம் தங்களுக்கு பல வழிகளில் நன்மைகளை செய்யும் வருடமாக அமையும்.

பரிகாரம்
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வரவும்.
தினசரி வீட்டில் விளக்கேற்றி சொல்ல வேண்டிய மந்திரம்.
“ஓம் காத்யாயனாயை வித்மஹே
கன்யாகுமரிச தீமஹி

தநநோ துர்கி ப்ரசோதயாத்!”

No comments: