சிம்மராசி நேயர்களே!
இந்த தமிழ் புத்தாண்டு மன்மத வருடம் தங்களுக்கு நன்மையும்,தீமையும்
கலந்து நடக்கும் வருடமாகும்.முதலில் உடல் நலத்தில் கவனமுடன் இருக்க
வேண்டும்.தேவை இல்லாத டென்ஷன் உண்டாகும்.அதனால் உடல்நலம் பாதிக்க கூடும்.டென்ஷன்
இல் இருந்து விடுபட ஆன்மீகத்தில்
ஈடுபாடு கொள்ள வேண்டும்.
தெய்வ வழிபாட்டின் மூலமாக டென்ஷன்னைகுறைக்கலாம்.கோர்ட் வழக்குகளில்
பிரச்சனைகள் இருந்தாலும் தங்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும்.தெய்வ வழிபாடுகள் விடாமல் செய்யவும்.ஜூலை மாதம் 7 ஆம் தேதிக்கு பிறகு ஜென்மத்தில் குரு தங்களது ராசிக்கு ஐந்து எட்டுக்கு உடைய வனாக இருப்பதால் தங்களுக்கு கண்டம் ஏற்பட வாய்ப்பு உண்டு உடல் நலத்தில் அதிக அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்.
தங்களது சகோதர,சகோதரிகளிடம் மனம் கோணாமல் நடந்து கொள்ளவும்.
சொத்து பிரச்சனைகளில் அவர்களுக்கு சேர வேண்டிய பாகத்தை கொடுத்து விடவும். இதனால் அவர்கள் மனஉளைச்சல் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி
விடும்.ஒருவர்குஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது.வயதுக்கு வந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம்
கைகூடும்.பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பரிகாரம்
காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வரவும்.ஞாயிறு மாலை 4 ½ to 6 பைரவருக்கு
மிளகு தீபம் ஏற்றி 9 வாரம் அர்ச்சனை செய்து வரவும்.1௦ தாவது வாரம் தேங்காயில்
நல்லெண்ணெய்
ஊற்றி இரண்டு தேங்காயில் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வந்தால்
ஆயுள்,ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்
“ஓம் காளிகையைச வித்மஹே
ச்மாசன வாசசின்ய தீமஹி
தநநோ கோரப்ரசோதயாத்!”
No comments:
Post a Comment