Sunday 29 March 2015

2015 - தமிழ் ஆண்டு பலன்கள் - கடக ராசி (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்):

கடகராசி நேயர்களே!


இந்த மன்மத வருடம் தங்களுக்கு பல வழிகளில் அலைச்சல் உண்டாகும்.
உத்தியோகத்தில் மாறுதலாகி செல்ல நேரிடும்.அதன் மூலம் ஒரு சிலர் குடும்பத்தை பிரிந்து செல்ல நேரிடும்.கணவன்,மனைவி இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஒருவருக்கொருவர் கோபத்தை குறைத்து கொண்டு விட்டு கொடுத்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.ஜூலை மாதத்திற்கு பிறகு ஒரு சிலர் புதிய வீடு வாங்கி குடியேறுவர்.வாகன யோகமும் ஏற்படும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.உத்தியோகம் இல்லாதவர்களுக்குவேலைகிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவர்.ஒரு சிலர் புதிய தொழில்
தொடங்குவர். 08.01.2016 பிறகு ராகு,கேது பெயர்ச்சி அடைவதால் செலவீனங்களை கட்டுபடுத்தவும்.உடல் நலத்தில் அக்கறையுடன் செயல்படவும்.இல்லவிட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

பரிகாரம்
திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டு வரவும்.
ராமேஸ்வரம் சென்று வரவும்.தினசரி வீட்டில் விளக்கு ஏற்றி கீழ்க்கண்ட
மந்திரத்தை சொல்லி வரவும்.

“ஓம் குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவ மகேஷ்வர குரு சாட்சாத்
பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ!”

No comments: