Saturday 28 March 2015

2015 - ஆண்டு பலன்கள் - ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகஸ்ரிஷம் 1,2 பாதங்கள்)

நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ரிஷபராசி அன்பர்களே!



இந்த மன்மத வருடம் தங்களுக்கு பல வழிகளில் நன்மை செய்யும்.
பிரிந்த தாய்,தந்தையருடன் சேர்வர்.தாய்,தந்தையர்க்கு இருந்து
வந்த உடல் உபாதைகள் நீங்கி பூரண நலம் பெறுவார்கள்.பிள்ளைகளால் அவர்களுக்கு நன்மை உண்டாகும்.
ஒருசிலர் வேலை நிமித்தமாக வெளிநாடு போகும் வாய்ப்பு பெறுவார்.

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.குடும்பத்தில்
மகிழ்ச்சி உண்டாகும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம்
கைகூடும்.பொன்,பொருள் சேர்கை உண்டாகும்.அதே சமயம் தங்களுக்கு கண்டசனி நடைபெற்று வருவதால் கணவன்,
மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு.
ஒருவர்க்க்குகொருவர் விட்டு கொடுத்து  வாழ பழகி கொள்ள வேண்டும்.

வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் செல்லவும். இல்லா விட்டால்
விபத்துக்கள் உண்டாகும்.பொருளாதரத்தில் மேன்மை உண்டாகும்.கல்வியில் மேன்மை உண்டு.ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

பரிகாரம்

திருவண்ணாமலை கிரிவலம் சென்று வரவும்.ஒவ்வொரு பிரதோஷம் அன்று
சிவபெருமானை வழிபட்டு வரவும்.தினசரி வீட்டில் விளக்கேற்றி கீழ்க்கண்ட
மந்திரத்தை சொல்லி வந்தால் வாழ்க்கை வளமாக அமையும்.

"ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேனாய தீமஹி
தநநோ ருத்திர ப்ரசோதயாத்!"


No comments: