Saturday 28 March 2015

2015 - தமிழ் ஆண்டு பலன்கள் - மேஷ ராசி ((அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)

சாதனை புரிய துடிக்கும் மேஷ ராசி அன்பர்களே!




இந்த வருடம் கடக லக்னத்தில் குரு உச்சம் பெற்று சந்திரனை 
பார்ப்பதால் தங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றி மேல் வெற்றி
உண்டாகும்.தங்களிடம் போட்டி போடுபவர்கள் காணாமல் போய்
விடுவர்.சுக்ரன் ஆட்சி பெற்று உள்ளதால் பூர்விக சொத்துகளிலேருந்த  பிரச்சனைகள் நீங்கி சொத்து சேர்கை உண்டாகும்.ஒரு சிலர் புதிதாக வீடு,மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

தந்தையால் ஒரு சிலருக்கு நன்மை உண்டாகும்.வாகனம் ஒரு சிலர் புதிதாக வாங்குவார்கள்.வழக்குகளில் வெற்றி பெற்று அதன் மூலம் ஒரு சிலர் நன்மை அடைவார்கள். அதே சமயம் இந்த
ராசிகாரர்களுக்கு அஷ்டம சனி நடைபெற்று வருவதால் உடல் நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.உஷ்ண சம்பந்தப்பட்ட
வியாதிகளால் அவஸ்தைபடுவார்கள்.

ஒரு சிலருக்கு ஆபரேஷன் நடக்க வாய்ப்பு உண்டு.சர்க்கரை
நோய்,பிரஷர் போன்றவை உண்டாகும்.எலும்பு சம்பந்தப்பட்ட
பிரச்சனைகளும் ஏற்படும்.மொத்ததில் உடல் ஆரோக்யத்தில் 
கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்

சனிக்கிழமை தோறும் சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம்
ஏற்றி வழிபட்டு வரவும்.பெருமாள் கோயில்,ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வரவும்.திருப்பதி வெங்கடசலபதியை
ஒருமுறை தரிசனம் செய்து வரவும்.தினசரி சொல்ல வேண்டிய
மந்திரம் (தீபம் ஏற்றி சொல்லி வரவும்)

"ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்!"




No comments: