வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் திறமைசாலிகளே!
இதுவரை 3-ம் இடத்தில இருந்த சனிபகவான் தற்போது 4-ம் இடத்திற்கு அர்த்தாஷ்டம சனியாக
வருவதால் கவனமுடன் இருக்கவும். உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் கவனமாக
பேசவும். தேவையில்லா வீண் விரோதம் உண்டாகும். எதிரிகளால் தொல்லை உண்டாகும். தாயைப்
பிரிந்து செல்ல நேரிடும். ஒரு சிலர் வெளியூர் செல்ல நேரிடும். வாகனத்தில் கவனம்
தேவை. வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். இவர்களுக்கு ராகுவும், கேதுவும்
சரியில்லை. குருவும் ஜென்மத்திற்கு வரப்போகிறார். ஆகையால் இந்த ராசிக்காரர்கள்
மிகுந்த கவனமுடன் இறை வழிப்பாட்டின் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யும்.
பரிகாரம்: விநாயகரை தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தி தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். ஞாயிறு 4 1/2 – 6 ராகு காலத்தில் பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபடவும். தினசரி சூரிய பகவானை வழிபட்டு வரவும்.
No comments:
Post a Comment