Tuesday 30 December 2014

2015 - ஆண்டு பலன்கள் - ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருகஸ்ரிஷம் 1,2 பாதங்கள்)

நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ரிஷபராசி அன்பர்களே!

தாங்கள் எப்போதும் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுபவர்கள். தற்போது ஏழாம் இடமான விருச்சிகத்தில் கண்டசனி நடைபெறுவதால் கவலைப்பட வேண்டாம். எதிலும் கவனமாக இருக்க வேண்டும். சுக்கிரனுக்கு சனி நண்பர். பெரிய பாதிப்புகள் எதுவும் நடைபெறாது. பெரியோர்கள் ஆலோசனைகளை கேட்டு செய்தால் எல்லா காரியங்களும் நல்லபடியாக அமையும்.

சில சமயம் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படலாம். எதிலும் நிதானம் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்களை பகைத்து கொள்ள வேண்டாம். இந்த ஆண்டு ஆபரண சேர்க்கை சேரும். மற்ற கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக அமைவதால் தொழில், வியாபாரம் நன்மை உண்டாகும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் அதிகாரிகளுடன் சுமுகமான முறையில் நடந்து கொள்ளவும். வீண் தர்க்கம் வேண்டாம். வண்டி வாகனங்கள் ஒரு சிலர் வாங்க நேரிடும். பொருளாதார சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும்.
மார்ச் 15 முதல் 31 ஜூலை  வரை சனி வக்கிரம் அடைவதால் சமூகத்தில் தங்களுக்கு அந்தஸ்து கிடைக்கும். மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். வாழ்வில் பல முன்னேற்றமான பலனை அனுபவிப்பீர்கள்.

31 ஜூலை பிறகு எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். பொருள் விரயம் உண்டாகும். ஜூலை 5 ஆம் தேதி மாறும் குருபகவான் நன்மை தருவார் என்று சொல்ல முடியாது. உடல் நலம் பாதிக்கும். ஆனால் குருவின் பார்வையால் நன்மை உண்டாகும். சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். வெற்றிலை மாலை வடமாலை சாத்தி வரலாம். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்து வரவும்.
எல்லாவகையிலும் நன்மை உண்டாகும்.

No comments: