தனுசு ராசி நேயர்களே!
தற்போது 7 ½ சனி நடை பெற்று வருவதால் முதல் சுற்று என்றால் இன்னல்களும்,இரண்டவது
சுற்று என்றால் சற்று நன்மையான பலன்களும்,மூன்றாவது என்றால் உடல் நலம் சற்று பாதிக்க படுவதுமான பலன்கள் நடைபெறும் உத்தியோகதில் உள்ளவர்கள் மாற்றலாகி வேறு ஊர் அல்லது வெளி
நாடு செல்ல நேரிடும்.கல்வித்துறையில் உள்ளவர்கள் மேன்மை அடைவார்கள்.பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
ஒரு சிலர் புதிதாக வீடு வாங்கும் யோகம் அடைவார்கள்.உடல் நலத்தில்
அதிக அக்கறை காட்ட வேண்டும்.கண்டதை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை
கெடுத்து கொள்ள வேண்டாம்.தொழில் புரிய
நினைபவர்களுக்கு தொழில் நன்றாக அமையும்.ஒரு சிலர் வீட்டை புதுப்பித்துபராமரிப்பு
வேலை செய்வர்.மாணவ மாணவியர் கல்வியில்
சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள்.
அதே சமயம் கவனமுடன் படித்து வரவும்.திருமண வயது உள்ளவர்களுக்கு
திருமணம் நடைபெறும்.குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி
கரமாக இருக்கும்.உறவினர்களுடன் இருந்த மன கசப்பு நீங்கி ஒன்று சேரும்
காலமிது.சுய தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட்டால்
தொழில் வளர்ச்சி அடையும்.நிலம்,மனை வாங்கி விற்பவர்கள் நல்ல
லாபம் அடைவார்கள்.விவசாயிகள் லாபம் அடைவார்கள்.
அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல்ல காலமாக அமையும்.
தந்தையின் பூர்விக சொத்துகள் ஒரு சிலருக்கு கிடைக்கும் வாய்ப்பு
உள்ளது.
பரிகாரம்
திருவாலங்காடு சிவனை தீபம் ஏற்றி வழிபட்டு அர்ச்சனை செய்துவரவும்.
அங்குள்ள மாந்தீஸ்வரரை வணங்கி வரவும்.தினசரி சொல்ல வேண்டிய
மந்திரம்.
“ஓம் ஸ்ரீ மந்த புத்ராய வித்மஹே
ஸ்ரீ சூர்ய பௌத்ராய தீமஹி
தநநோ மாந்தி பிரசோதயாத்!”
No comments:
Post a Comment