Monday 6 April 2015

தமிழ் புத்தாண்டு 2015 ராசிபலன்கள் விருச்சிக ராசி (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

விருச்சிக ராசி நேயர்களே!


இந்த மன்மத வருடம் தங்களுக்கு அதிக அளவில் தொல்லைகள் தராத
வருடமாகும்.தங்களுக்கு ஜென்ம சனி நடைபெற்று வருவதால் பணம்,பொருள்,ஆபரணங்கள் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
உத்தியோகத்தில் உள்ளவருக்கு உழைப்பு அதிகமாக இருக்கும்.உழைப்பின்
மூலமாக பணவரவு அதாவது சம்பளம் உயர்வதற்கு வாய்ப்புஉண்டு.
தொழில் செய்பவர்கள் உழைப்பின் பலனாக லாபம் அதிகரிக்கும்.
உழைக்காமல் இருந்தால் பணத்திற்கு சிரமப்பட வேண்டீருக்கும்.

வாகனங்கள் வாங்குவதும்,விற்பதும் நடைபெறும்.ஒரு சிலருக்கு வாகனங்கள் பழுதடைதாலும் பராமரிப்பு செய்ய நேரிடும்.ரசாயன
தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும்.தனியார் கம்பனிகளில்
வேலை புரிபவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும்.ஒரு சிலர்
பணி நிமித்தம் காரணமாக வெளி நாடு செல்ல நேரிடும்.
இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர்கள் அதிக லாபம் அடைவார்கள்.

குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் ஒருவருக்குவர் மனகசப்புடன்
இருப்பார்கள்.உறவினர்களுடன் பகை ஏற்படும்.கவனமாக பேசவும்.
உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கவும்.வண்டி,வாகனங்களில் செல்வோர் கவனமுடன் செல்லவும்
ஒரு சிலருக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு.விவசாயிகள் நல்ல லாபம்
பெறுவார்கள்.வாடகை வீட்டில் உள்ளவர்கள் சொந்தமாக வீடு வாங்கி
குடி போவார்கள்.பொருளாதாரம் உடல் ஆரோக்கியம் இவைகளில் மிகுந்த
கவனமுடன் இருக்க வேண்டும்.

பரிகாரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு
வரவும்.தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்.

“ஓம் பூர் புவ ஸஉவக
தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோன ப்ரசோதயாத்!”

No comments: