Sunday 12 April 2015

தமிழ் புத்தாண்டு 2015 கும்ப ராசி (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்)



கும்ப ராசி நேயர்களே!

இந்த மன்மத வருடம் தங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலை நிமித்தம் காரணமாக வெளி நாடு
செல்வார்கள்.முன்பு இருந்த வேலை பளு சற்று குறையும்.ஒரு இடத்தில் உற்பத்தி ஆகும் பொருளை வேறு இடத்தில் விற்று சம்பதிபவர்கள் நல்ல
லாபம் அடைவார்கள்.கணினி துறையில் சமந்தப்பட்ட வர்களுக்கு நல்ல
லாபம் கிடைக்கும்.ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.ஒரு சிலருக்கு
பணி நிரந்திரம் கிடைக்கும்.பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
வழக்கு சம்பந்தப்பட்டவைகள் தங்களுக்கு சாதகமாக அமையும்.திருமணம்
ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.

ஒரு சிலருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.மொத்தத்தில் பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.வரவுக்கு ஏற்ற செலவுகளும்இருக்கும்.வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.விவசாயிகள் சுமாரான பலன்களை அடைவார்கள்.மாணவ,மாணவியர் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.விளையாட்டுதுறையில் உள்ளவர்கள்சாதனை
புரிவார்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

தாயுக்கு ஆபரேஷன் செய்யும் படி நேரிடும்.சர்கரை,ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி மருத்துவரை பார்க்க நேரிடும்.தெய்வ தரிசனம் காண ஒரு சிலர் புனித யாத்திரை செல்வார்கள்.கலைதுறையை சேர்த்தவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.அரசியலில் உள்ளவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.பொதுவாக இந்த ராசிகாரர்களுக்கு இனி எல்லாமே நன்மையாக நடைபெறும்.

பரிகாரம்

சுருட்டபள்ளி சிவபெருமானை தீபம் ஏற்றி வழிபட்டு அர்ச்சனை செய்து
வரவும்.தினசரி சொல்ல வேண்டிய மந்திரம.

“ஓம் அச்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி

தந்நோ சுய ப்ரசோதயாத்!”

No comments: