மகர ராசி நேயர்களே!
இந்த மன்மத ஆண்டு தங்களுக்கு மிகவும் உன்னத ஆண்டாகவே அமைகிறது. இந்த
வருடத்தில் தாங்கள் நினைத்து வந்த அத்துணை காரியங்களும் இனிதே
நடைபெறும்.தங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாகி
விட்டது என்றே சொல்லாம். திருமணவயதில் உள்ளவர்களுக்கு திருமணம்
கைகூடும்.புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.
தொழில் இல்லாதவர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவார்கள்.தொழில் நல்ல முறையில்
நடைபெற்று நல்ல லாபம்
அடைவீர்கள்.உங்களால் பலர்நன்மை அடைவார்கள்.விரோதிகளாக
இருந்தவர்கள் கூட தற்போது உங்களிடம் நல்ல நட்புடன் இருப்பார்கள்.
கணவன்,மனைவிக்கும் ஒற்றுமை அதிகரிக்கும்.குடும்பத்தில் பிரிந்தவர்கள்
ஒன்று சேர்வார்கள்.வேலை நிமித்தம் காரணமாக ஒரு சிலர் வெளி நாடு
செல்வர்.
கல்வி பயிலும் மாணவ,மாணவியர் கவனமுடன் படித்து வந்தால் கல்வியில்
மேன்மை அடைவார்கள்.வேலை தேடுவோருக்கு வேலை
கிடைக்கும்.ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.பொருளாதரத்தில்
முன்னேற்றம் ஏற்படும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு
அதிக லாபம் கிடைக்கும்.ஒரு சிலர் வீடு,வாகனம் வாங்கும் காலமிது.
பூர்விக சொத்துகளில்ருந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒரு சிலருக்கு பூர்விக
சொத்து கிடைக்கும்.விவசாயிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
நோய்,நொடிகளில் இருந்து இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றம் அடைவர்.
உடல் ஆயுள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்
மதுரை மாவட்டம் அழகர் கோயில் சென்று பெருமாளை தரிசனம் செய்து
வழிபட்டு வரவும்.தினசரி சொல்ல வேண்டிய மந்திரம்.
“ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ம பிரசோதயாத்!”
No comments:
Post a Comment